sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

போதை மறுவாழ்வு மையம் சென்றவர் மறுநாளே பலி

/

போதை மறுவாழ்வு மையம் சென்றவர் மறுநாளே பலி

போதை மறுவாழ்வு மையம் சென்றவர் மறுநாளே பலி

போதை மறுவாழ்வு மையம் சென்றவர் மறுநாளே பலி


ADDED : மே 15, 2025 12:13 AM

Google News

ADDED : மே 15, 2025 12:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானகரம், :போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கல், தெள்ளியார் அகரம் பகுதியைச் சேர்ந்தவர் சர்மா, 47. இவர், அரசு வருவாய்த்துறை அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார்.

மதுப்பழக்கத்திற்கு அடிமையான சர்மா, அடிக்கடி வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதையடுத்து, அவரது குடும்பத்தினர், வானகரத்தில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் இரு தினங்களுக்கு முன், சிகிச்சைக்காக சர்மாவை சேர்த்தனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறி சர்மாவை, போதை மறுவாழ்வு மைய ஊழியர்கள், போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

மருத்துவர்களின் பரிசோதனையில், அவர் உயிரிழந்தது தெரிய வந்தது. இதையடுத்து, சர்மாவின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட மறுநாளே, சர்மா உயிரிழந்தது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது எனக்கூறி, வானகரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவரது உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனை முடிவு வந்தபிறகே, அவரது இறப்பிற்கான காரணம் தெரிய வரும் என, போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us