ADDED : பிப் 21, 2025 12:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை :சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பு:
சென்னை மாநகராட்சி, மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை குறைப்பது குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
வரும் 22ம் தேதி, தீவுத்திடலில், மாணவ, மாணவியர், தன்னார்வலர்கள் பங்கேற்கும், 'மாரத்தான் ஓட்டம்' நடைபெற உள்ளது.
ராயபுரம், தேனாம்பேட்டை, அடையாறு மண்டலங்களில் உள்ள வழிபாட்டு தலங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றும் பணி நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

