ADDED : பிப் 22, 2024 12:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்குன்றம்,சென்னை மாதவரம் அடுத்த மூலக்கடை, பெரியார் நகரைச் சேர்ந்தவர் பிரேம் சுந்தர், 34. பாரம் துாக்கும் தொழிலாளி. அவருடன் வேலை செய்யும், வடகரை ஊராட்சியைச் சேர்ந்த அப்பன்ராஜூவுடன் வேலையில் விரோதம் ஏற்பட்டது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, பிரேம் சுந்தர் வேலை முடிந்து வரும் வரை காத்திருந்த அப்பன்ராஜ், தன் கூட்டாளிகள் ஐந்து பேருடன் வழிமறித்து, கத்தியால் சரமாரியாக வெட்டினர்.
பலத்த காயமடைந்து மயங்கி விழுந்த பிரேம் சுந்தரை, அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அப்பன்ராஜ் மற்றும் அவரது கூட்டாளிகளை, செங்குன்றம் போலீசார் தேடி வருகின்றனர்.