sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டிய மனநலம் பாதித்த நபர்

/

வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டிய மனநலம் பாதித்த நபர்

வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டிய மனநலம் பாதித்த நபர்

வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டிய மனநலம் பாதித்த நபர்


ADDED : செப் 02, 2025 02:02 AM

Google News

ADDED : செப் 02, 2025 02:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிட்லப்பாக்கம்:சிட்லப்பாக்கத்தில், ஒரு வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்த மனநலம் பாதிக்கப்பட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

சிட்லப்பாக்கம், முனுஆதி தெருவில் வசிப்பவர் சேஷாத்ரி. நேற்று முன்தினம் இரவு, இவரது வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் வந்தது.

சம்பந்தப்பட்ட வீட்டிற்கு சென்ற சிட்லப்பாக்கம் போலீசார், அவ்வீடு முழுதும் சோதனை நடத்தினர். வெடிகுண்டு நிபுணர்களும் விரைந்து வந்து சோதனை நடத்தினர். அதில், அது புரளி என்பது தெரியவந்தது.

விசாரணையில், வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறிய நபர், சிட்லப்பாக்கம், ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த பாரதிதாசன், 39, என்பதும், அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது.

மேலும், அவர் ஏழு ஆண்டுகளாக, திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார், பாரதிதாசனின் பெற்றோரை வரவழைத்து, எச்சரித்து அனுப்பினர்.






      Dinamalar
      Follow us