ADDED : அக் 19, 2025 03:31 AM
சென்னை: ரயில் பாதை பராமரிப்பு பணி காரணமாக, மெட்ரோ ரயில் சேவையில் நாளை முதல், வரும் 24ம் தேதி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:
ஆண்டு பராமரிப்பின் ஒரு பகுதியாக, இரு வழித்தடங்களிலும், தண்டவாள பராமரிப்பு பணிகள், நாளை முதல் 24ம் தேதி வரை, காலை 5:00 மணி முதல் காலை 6:30 மணி வரை நடக்க உள்ளன.
இந்த நேரத்தில் வழக்கமான, 7 நிமிட இடைவெளிக்கு பதிலாக, 14 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
காலை 6:30 மணிக்குப்பின், மெட்ரோ ரயில் சேவைகள் வழக்கம்போல எவ்வித மாற்றமும் இன்றி இயங்கும். அதற்கேற்ப பயணியர் தங்கள் பயணத்தை திட்டமிட்டு கொள்ளவும்.
மேலும் உதவிக்கு, மெட்ரோ ரயில் நிறுவன உதவி மையத்தை 1860- 425 -1515 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது www.chennaimetrorail.org என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.