sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சென்னையில் பூமிக்கடியில் மின்கேபிள் நிதிக்கு காத்திருப்பதாக அமைச்சர் தகவல்

/

சென்னையில் பூமிக்கடியில் மின்கேபிள் நிதிக்கு காத்திருப்பதாக அமைச்சர் தகவல்

சென்னையில் பூமிக்கடியில் மின்கேபிள் நிதிக்கு காத்திருப்பதாக அமைச்சர் தகவல்

சென்னையில் பூமிக்கடியில் மின்கேபிள் நிதிக்கு காத்திருப்பதாக அமைச்சர் தகவல்


ADDED : மார் 29, 2025 03:11 AM

Google News

ADDED : மார் 29, 2025 03:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:''சென்னையில், பூமிக்கடியில் மின் கேபிள் அமைக்கும் பணிகள், நிதி கிடைத்தவுடன் மேற்கொள்ளப்படும்,'' என, மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

சட்டசபையில் நடந்த விவாதம்:

தி.மு.க., - பிரபாகர் ராஜா: எம்.ஜி.ஆர்., நகர் பகுதியில் அனைத்து தெருக்களும் குறுகலாக உள்ளன. உயர்நிலை மின் கம்பங்கள் மக்களுக்கு ஆபத்தாக உள்ளன. அமைச்சர் விரைந்து, பூமிக்கடியில் மின் கேபிள்கள் அமைத்து தரவேண்டும். மழை நேரத்தில் மின்தடை ஏற்படுதை தடுத்து தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு பல பகுதிகளில் மின்பெட்டி உயர்த்தி தரப்பட்டு உள்ளது. விடுபட்ட பகுதிகளில் அந்த பணியை நிறைவு செய்யவேண்டும்.

அமைச்சர் செந்தில்பாலாஜி: சென்னை மாநகராட்சியில் ஐந்து கோட்டடங்களில் உயர் தாழ்வழுத்த மின்கம்பிகள், பூமிக்கடியில் அமைக்கப்பட்டு உள்ளன. கே.கே.நகர், தண்டையார்பேட்டை, வியாசர்பாடி ஆகிய கோட்டங்களில் பூமிக்கடியில் மின் கேபிள்கள் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, நிதி அனுமதி கோரப்பட்டுள்ளது. சென்னை முழுதும் விடுபட்ட பகுதிகளில் பூமிக்கடியில் மின்கேபிள்கள் அமைக்கும் பணிகள், நிதி கிடைத்தவுடன் மேற்கொள்ளப்படும். சென்னையில் சீரான மின் வினியோகத்திற்காக மின் பெட்டி ஒரு மீட்டர் உயர்த்தி அமைக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு விவாதம் நடந்தது.






      Dinamalar
      Follow us