/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
படகு குழாம் மிதவை பைக்கில் 'ரைடு' போன அமைச்சர் நேரு
/
படகு குழாம் மிதவை பைக்கில் 'ரைடு' போன அமைச்சர் நேரு
படகு குழாம் மிதவை பைக்கில் 'ரைடு' போன அமைச்சர் நேரு
படகு குழாம் மிதவை பைக்கில் 'ரைடு' போன அமைச்சர் நேரு
UPDATED : ஜன 14, 2026 05:28 AM
ADDED : ஜன 14, 2026 05:27 AM

சென்னை: மணலி ஏரி படகு குழாமை திறந்து வைத்த அமைச்சர் நேரு, மிதவை பைக்கில் 'ரைடு' செய்து அசத்தினார்.
சென்னை, மாதவரம் ஏரி, 15.03 கோடி ரூபாய் செலவிலும், மணலி ஏரி, 10.41 கோடி ரூபாய் செலவிலும் புனரமைக்கப்பட்டு, படகு குழாம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு திறந்து வைத்தார். பின், மணலி ஏரி - படகு குழாமில், இருநபர் அதிவேகமாக செல்லக் கூடிய மிதவை பைக்கில் துணிச்சலாக ஏறி ரைடு சென்றார்.
தொடர்ந்து, பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில், சென்னை மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், எம்.எல்.ஏ.,க்கள் சங்கர், சுதர்சனம், துரை சந்திரசேகர், மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன், மண்டல குழு தலைவர்கள் ஆறுமுகம், தனியரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

