sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கிளாம்பாக்கத்தில் இருந்து கூடுதல் பஸ்கள் தேவைக்கேற்ப இயக்க அமைச்சர் உத்தரவு

/

கிளாம்பாக்கத்தில் இருந்து கூடுதல் பஸ்கள் தேவைக்கேற்ப இயக்க அமைச்சர் உத்தரவு

கிளாம்பாக்கத்தில் இருந்து கூடுதல் பஸ்கள் தேவைக்கேற்ப இயக்க அமைச்சர் உத்தரவு

கிளாம்பாக்கத்தில் இருந்து கூடுதல் பஸ்கள் தேவைக்கேற்ப இயக்க அமைச்சர் உத்தரவு


ADDED : ஜூன் 10, 2025 12:23 AM

Google News

ADDED : ஜூன் 10, 2025 12:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை,கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூருக்கு போதிய அளவில் பேருந்துகளை இயக்கும்படி, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் உத்தரவிட்டுள்ளார்.

கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு, போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் காத்திருந்த, 6,000த்திற்கு மேற்பட்ட பயணியர், ஒரு வாரத்திற்கு முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில், தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது. அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர்கள் உட்பட அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

அப்போது, கிளாம்பாக்கம் பேருந்து நிலையில் பயணியர் அதிகம் குவியும்போது, அவர்களை ஒழுங்குபடுத்த கூடுதலாக போலீசாரை நியமிக்க வேண்டும் என, அதிகாரிகள் தரப்பில் கோரிக்கை முன் வைக்கப்பட்டது.

இதையடுத்து, பயணியர் தேவைக்கு ஏற்ப, அனைத்து வழித்தடங்களிலும் பேருந்துகளை இயக்க வேண்டும். இதற்காக, கிளாம்பாக்கத்தில் பேருந்துகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என, அமைச்சர் சிவசங்கர், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும், சென்னையில் மின்சார பேருந்து சேவை துவக்குவது, போக்குவரத்து ஊழியர்களுக்கு புதிய ஊதிய ஒப்பந்தம், ஓய்வு கால பலன்கள், புதிய பேருந்துகள் இயக்கம் ஆகியவை குறித்து, கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us