sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சாலை துண்டிப்புக்கு கட்டணமின்றி இணைப்பு தர எம்.எல்.ஏ., கோரிக்கை

/

சாலை துண்டிப்புக்கு கட்டணமின்றி இணைப்பு தர எம்.எல்.ஏ., கோரிக்கை

சாலை துண்டிப்புக்கு கட்டணமின்றி இணைப்பு தர எம்.எல்.ஏ., கோரிக்கை

சாலை துண்டிப்புக்கு கட்டணமின்றி இணைப்பு தர எம்.எல்.ஏ., கோரிக்கை


ADDED : ஏப் 23, 2025 12:38 AM

Google News

ADDED : ஏப் 23, 2025 12:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, சோழிங்கநல்லுார் தொகுதி எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ், நேற்றுமுன்தினம், சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது பேசியதாவது:

சோழிங்கநல்லுார் தொகுதியில் பல இடங்களில், குடிநீர், கழிவுநீர் திட்ட பணி முடிந்து, வீடுகளுக்கு இணைப்பு வழங்கும் பணி துவங்கியது.

வரைபடம் அனுமதி பெறும்போதே, சாலை துண்டிப்பு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வீடுகளுக்கு இணைப்பு வழங்க சேர்த்துதான், ஏற்கனவே குடிநீர், கழிவுநீர் திட்ட ஒப்பந்தம் கோரப்படுகிறது.

இந்நிலையில், இணைப்பு கேட்டு விண்ணப்பிக்கும்போது, மீண்டும் சாலை துண்டிப்பு கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் நிலவுகிறது. இதனால், மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். சாலை துண்டிப்பு கட்டணம் இல்லாமல் குடிநீர், கழிவுநீர் இணைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் நேரு, ''டிபாசிட் தொகை அதிகம் கேட்க வேண்டாம்; இணைப்பு கொடுங்கள் என, சென்னை குடிநீர் வாரியத்திற்கு வலியுறுத்தி உள்ளோம். சாலை துண்டிப்பு கட்டணம் இல்லாமல் இணைப்பு வழங்க வேண்டும் என்ற எம்.எல்.ஏ.,வின் கோரிக்கை கவனத்தில் கொள்ளப்படும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us