sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

எலிகளும் பெருகி வருவதால் பொதுமக்கள் அவதி கொசு தொல்லை! மருந்து பற்றாக்குறையால் புலம்பும் அலுவலர்கள்

/

எலிகளும் பெருகி வருவதால் பொதுமக்கள் அவதி கொசு தொல்லை! மருந்து பற்றாக்குறையால் புலம்பும் அலுவலர்கள்

எலிகளும் பெருகி வருவதால் பொதுமக்கள் அவதி கொசு தொல்லை! மருந்து பற்றாக்குறையால் புலம்பும் அலுவலர்கள்

எலிகளும் பெருகி வருவதால் பொதுமக்கள் அவதி கொசு தொல்லை! மருந்து பற்றாக்குறையால் புலம்பும் அலுவலர்கள்

2


ADDED : பிப் 19, 2025 11:47 PM

Google News

ADDED : பிப் 19, 2025 11:47 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னையில் கொசுத் தொல்லை அதிகரித்து வரும் நிலையில், கட்டுப்படுத்த மாநகராட்சி கவனம் செலுத்தாதால், பொதுமக்கள் இரவில் நிம்மதியாக துாங்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எலியும் பெருகி பாடாய் படுத்துவதால், காய்ச்சல், சளி தொல்லையால் மக்கள் திணறும் நிலையில், தொற்று பாதிப்புகளும் ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 'மருந்து தட்டுப்பாடு இருப்பதால், எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை' சுகாதார ஆய்வாளர்கள் புலம்புகின்றனர்.

சென்னையில், கூவம், அடையாறு, பகிங்ஹாம் கால்வாய் ஆகிய நீர்நிலைகள் முக்கியமானவை. இவை தவிர, கிளை கால்வாய்களான மாம்பலம், ஓட்டேரி நல்லா கால்வாய் உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்ட நீர்நிலைகளில் நன்னீரைவிட, கழிவுநீர் தான் அதிகம் ஓடுகிறது.

இதன் காரணமாக, சென்னை மாநகரம் கொசுக்களின் வாழ்விடமாகவே உள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில், நாளுக்கு நாள் கொசு பெருக்கம் அதிகரித்துள்ளது. கொசு தொல்லையால் இரவில் நிம்மதியாக துாங்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

சாலை, பேருந்து நிறுத்தங்கள், சிக்னல்களில் நின்றாலும், கொசு கடித்து, மக்களை பாடாய் படுத்தி வருகிறது. இதை கட்டுப்படுத்த மாநகராட்சி பெரிதாக எந்த முயற்சியும் எடுக்காமல் சுணக்கம் காட்டி வருகிறது.

ஏற்கனவே காய்ச்சல், சளி தொல்லையால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், தொற்று நோய் பாதிப்புகளும் ஏற்படுமோ என, அச்சமடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.

சாதகமான சூழல்

தற்போது குளிர்காலம் முடிந்து கோடைக்காலம் துவங்கியுள்ள நிலையில், கொசு இனப்பெருக்கத்திற்கு உகந்த சூழல் இருப்பதாக, பூச்சியியல் வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.

இதில், கடித்து தொல்லை கொடுக்கும், 'கியூலெக்ஸ்' வகை கொசுக்கள், அதிகம் இனப்பெருக்கமடைந்து உள்ளன. இந்த வகை கொசுக்கள், காய்ச்சல் பாதிப்பை ஏற்படுத்தும். காய்ச்சலுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை பெறாவிட்டால், நரம்பு மண்டலத்தை பாதித்து, மூளை காய்ச்சலையும் ஏற்படுத்தக்கூடும் என, டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.

புலம்பல்

இனப்பெருக்கம் அதிகரித்து, கொசு தொல்லை கட்டுப்படுத்த, மாநகராட்சி போதிய அளவில், எம்.எல்.ஏ., என்ற கொசுப்புழு கொல்லி எண்ணெய் தரவில்லை எனவும், அதனால் கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த முடியவில்லை எனவும், சுகாதார ஆய்வாளர்கள் புலம்புகின்றனர்.

இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

சென்னை மாநகராட்சியில், 200 வார்டுகள் உள்ளன. வார்டு அளவை பொறுத்து, ஒரு நாளைக்கு தினமும், 15 முதல் 20 லிட்டர் எம்.எல்.ஓ., மருந்து தேவை. ஆனால், வாரத்திற்கு, 40 லிட்டர்தான் தரப்படுகிறது.

ஒரு வார்டில், 150 முதல் 200 தெருக்கள் வரை உள்ளன. மாநகராட்சி கொடுக்கும் குறைந்த அளவு மருந்து, மூன்று நாட்கள் வரை தான் இருக்கும். அதுவும், பெரிய தெருக்களாக இருந்தால், ஓரிரு தெருக்களில் உள்ள மழைநீர் வடிகால்களில் மருந்து தெளிக்க முடியும்; புகை பரப்ப முடியும்.

இதில், கொசுப்புழுக்களாக இருக்கும்போது ஓரளவு கட்டுப்படுத்த முடியும். ஆனால், வளர்ந்த கொசுக்களாக இருந்தால், ஒரு பகுதியில் புகை பரப்பினாலும், மற்றொரு இடத்திற்கு பறந்து சென்று தப்பித்து விடும்.

மாநகர் முழுதும் கொசுவை ஒழிக்க வேண்டும் என்றால், ஒரு மாதம், தீவிர கொசு ஒழிப்பு பணிகளில் ஈடுபட வேண்டும். அதற்கு போதிய அளவில், மருந்துகளையும் மாநகராட்சி வழங்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

எலியும் பெருகிடுச்சு


மழைநீர் வடிகால் நீரை அகற்ற உத்தரவு

மாநகராட்சி அறிவுரை:* நீர் தேங்கியுள்ள மழைநீர் வடிகால்களிலும், நீர்வழித் தடங்களிலும் வாரம் ஒருமுறை கொசுப்புழு கொல்லி எண்ணெய் தெளிக்க வேண்டும்* மழைநீர் வடிகால்களிலும் நிரந்தரமாக தேங்கியுள்ள நீரை, நீர் உறிஞ்சும் வாகனம் வாயிலாக அகற்ற வேண்டும்* மழைநீர் கால்வாய்களிலும், காலை, மாலையில் புகைப்பரப்பும் பணி மேற்கொள்ள வேண்டும்* தெருக்களில் உள்ள திறந்தவெளி கால்வாய்களில் குப்பை, மண் ஆகியவற்றை அகற்ற வேண்டும்* ஒரு தெருவில் வாரத்திற்கு ஒருமுறை காலை, மாலை வேளைகளில் கொசு ஒழிப்பு புகைப்பரப்பும் பணி மேற்கொள்ள வேண்டும்* கொசுத்தொல்லை மிக அதிகம் கண்டறியப்பட்ட குடிசை பகுதிகள், இதர குடியிருப்பு பகுதிகளில், வீடுதோறும் புகைப்பரப்பும் பணியை மேற்கொள்வது அவசியம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



பொதுமக்கள் ஒத்துழைப்பும் அவசியம்!

வீடு மற்றும் சுற்றுப்புறத்தில் தண்ணீர் தேங்கி கொசுப்புழு உருவாக வாய்ப்புள்ள டயர், தேங்காய் சிரட்டைகள், உடைந்த குடங்கள், உபயோகமற்ற பொருட்கள், உடைந்த சிமென்ட் தொட்டிகள் ஆகியவற்றை உடனடியாக அகற்ற வேண்டும். கிணறு, மேல்நிலை தொட்டி, கீழ்நிலை தொட்டி, தண்ணீர் தொட்டிகள் ஆகியவற்றை கொசுக்கள் புகாதவாறு மூடி வைக்க வேண்டும். தண்ணீர் நிரப்பிய பாத்திரங்களை வாரமொருமுறை சுத்தம் செய்து, உலர வைத்து, பின் தண்ணீரை நிரப்பி பயன்படுத்துவது அவசியம். வீட்டை சுற்றியுள்ள தேவையற்ற பொருட்களில் மழைநீர் தேங்காதவாறு அப்புறப்படுத்தி, மாநகராட்சியின் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.



விமான நிலையத்தில்

கொசு தொல்லைகதறும் பயணியர் சென்னை விமான நிலைய முனையங்கள் மற்றும் வளாகங்களில், சமீப நாட்களாக கொசு தொல்லை அதிகரிக்க துவங்கி உள்ளது. வருகை பகுதிகளில் அதிக அளவில் கொசுக்கள் காணப்படுவதால், 'டெங்கு' உள்ளிட்ட நோய் பரவும் அபாயம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இது, சர்வதேச பயணியர் மத்தியில் சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.இதுகுறித்து, பயணியர் கூறியதாவது:உள்நாட்டு விமான புறப்பாடு முனையம் 'டி1' மற்றும் டி4 முனையங்களில், கொசு தொல்லை அதிமாகி உள்ளது. கடந்த வாரம் பெங்களூரு செல்வதற்காக நண்பர்கள் மூன்று பேருடன், சென்னை விமான நிலையம் வந்தோம். பாதுகாப்பு சோதனைகள் முடித்து, நுழைவாயிலில் காத்திருந்தோம். வழக்கத்துக்கு மாறாக கொசுக்கள் காணப்பட்டன. 'ஏசி'யும் சரியாக இயங்கியும் கொசுக்கடியை சமாளிக்க முடியவில்லை. காத்திருக்கும் இடங்களை தவிர்த்து, தண்ணீர் குடிக்கும் பகுதியிலும் இதே நிலை உள்ளது. புதிதாக வரும் சர்வதேச பயணியர், இந்நிலையை பார்த்து முகம்சுளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஊழியர்களும் பெரிதும் அவதிப்படுகின்றனர். விமான நிலைய அதிகாரிகள் முறையாக மருந்து தெளித்து, கொசுவை கட்டுப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:விமான நிலைய கட்டடங்களுக்குள் கொசுக்கள் பரவாமல் இருக்க, ஒப்பந்த நிறுவனம் வாயிலாக, முன்னெச்சரி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறைந்த பயணியர் நடமாட்டம் உள்ள நேரத்தில் 'பாகிங்' முறை மேற்கொண்டு வருகிறோம். அவ்வப்போது கொசு மருந்து தெளிப்பும் செய்யப்படுகிறது. கட்டடங்கள் மற்றும் வளாகங்களுக்க்குள் கொசுக்கள் நுழையாதவாறு, எல்லா முக்கிய இடங்களிலும் 'ஏர் கர்டைன்கள்' பொருத்தப்பட்டுள்ளன. விமான நிலையத்தின் சுற்றுப்புறத்தில் தேங்கி நிற்கும் நீர், நிலப்பகுதிகள் மற்றும் கைவிடப்பட்ட குவாரிகளே, கொசுக்களின் பெருக்கத்திற்கான முக்கிய காரணம். தேவையான நடவடிக்கைகளை எடுக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.



- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us