sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 07, 2026 ,மார்கழி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பெரும்பாக்கம் பள்ளி சுவர் ஓவியங்களால் வண்ணமயம்

/

பெரும்பாக்கம் பள்ளி சுவர் ஓவியங்களால் வண்ணமயம்

பெரும்பாக்கம் பள்ளி சுவர் ஓவியங்களால் வண்ணமயம்

பெரும்பாக்கம் பள்ளி சுவர் ஓவியங்களால் வண்ணமயம்


ADDED : மார் 13, 2024 12:25 AM

Google News

ADDED : மார் 13, 2024 12:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, பெரும்பாக்கம் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வளாகத்தில், அரசு தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு, 500க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.

இந்த பள்ளி கட்டடம், தனியார் பள்ளிகளுக்கு ஈடாக முன்மாதிரியாக கட்டி, கடந்த ஆண்டு திறக்கப்பட்டது. கட்டடத்தை சுற்றி, 7 அடி உயரத்தில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டு உள்ளது.

இதில், கட்சி, வீட்டு சுப, துக்க நிகழ்ச்சி போஸ்டர்கள் ஒட்டி, சுவரை நாசப்படுத்தி வைத்திருந்தனர். இந்நிலையில், இந்த சுவரில், வண்ண ஓவியங்கள் வரைய, 'மைக்ரோ சிப்' என்ற நிறுவனம் முன்வந்தது.

சுவரில், பாடப்புத்தகம், பேனா, மாணவ - மாணவியரின் குதுாகலம், அப்துல்கலாம், தண்ணீர் சிக்கனத்தை உணர்த்துவது உள்ளிட்ட ஓவியங்கள் வரையப்படுகின்றன.

கண்கவர் ஓவியமாக இருப்பதால், சாலையில் செல்வோர் சில நிமிடம் நின்று, ஓவியத்தை ரசித்து செல்கின்றனர். மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.






      Dinamalar
      Follow us