sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

செம்மஞ்சேரி பாலம் சந்திப்பு பகுதியில் தினமும் மல்லுக்கட்டும் வாகன ஓட்டிகள்

/

செம்மஞ்சேரி பாலம் சந்திப்பு பகுதியில் தினமும் மல்லுக்கட்டும் வாகன ஓட்டிகள்

செம்மஞ்சேரி பாலம் சந்திப்பு பகுதியில் தினமும் மல்லுக்கட்டும் வாகன ஓட்டிகள்

செம்மஞ்சேரி பாலம் சந்திப்பு பகுதியில் தினமும் மல்லுக்கட்டும் வாகன ஓட்டிகள்


ADDED : நவ 02, 2024 12:33 AM

Google News

ADDED : நவ 02, 2024 12:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செம்மஞ்சேரி,

ஓ.எம்.ஆர்., மெட்ரோ ரயில் பணியால், தாம்பரம், மேடவாக்கம் நோக்கி இருவழிப்பாதையாக செல்வோர், சில மாதங்களாக இந்த சாலையை பயன்படுத்துகின்றனர்.

குறிப்பாக, குடிநீர், கழிவு நீர் லாரிகள், பள்ளி, கல்லுாரி பேருந்துகள் அதிகமாக செல்கின்றன. இதனால், வாகன நெரிசல் அதிகரித்துள்ளது.

செம்மஞ்சேரி கால்வாய் பாலம் நான்குவழி சந்திப்பில், ஒரு கனரக வாகனம் எதிர் திசையில் கவனக்குறைவாக திரும்பி, மீண்டும் பின்னால் வந்து முன்னோக்கி செல்லும் போது, மூன்று திசைகளில் இருந்து வரும் வாகனங்கள் முட்டிக் கொள்கின்றன.

அடுத்தடுத்து வரும் வாகனங்கள் முந்திச் செல்ல முயலும்போது, கடுமையான நெரிசல் ஏற்படுகிறது. இது, 'பீக் ஹவர்ஸ்' நேரத்தில், மேலும் அதிகரிக்கிறது. இதனால் பள்ளி, கல்லுாரி மற்றும் ஐ.டி., நிறுவனங்கள் செல்லும் வாகனங்கள் சிக்கிக் கொள்கின்றன.

இது குறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது:

காலை வணக்கம் பாடல் முடிந்த பின் தான், பள்ளிக்குள் செல்கிறோம். காலதாமதமாக சென்றால், பள்ளி, கல்லுாரி நிர்வாகம் கடிந்து கொள்கிறது. ஐ.டி., நிறுவனங்களில் பல்வேறு சிரமங்களை அனுபவிக்கிறோம்.

தாம்பரம், சேலையூர், மேடவாக்கம் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து செல்லும் வாகனங்களுக்கு, இந்த சிக்கல் அதிகரிக்கிறது.

செம்மஞ்சேரி மேம்பால சந்திப்பில் போக்குவரத்து போலீசார் நிற்பதில்லை.

சில நேரம், வாகன ஓட்டிகளே நெரிசலை சரி செய்கின்றனர். 'பீக் ஹவர்ஸ்' நேரத்தில், போக்குவரத்து போலீசார் நின்றால், நெரிசல் ஏற்படாமல் சீராக செல்ல முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us