sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 நெமிலிச்சேரி - திருநின்றவூர் சாலை கும்மிருட்டு; பீதியில் பயணிக்கும் வாகன ஓட்டிகள்

/

 நெமிலிச்சேரி - திருநின்றவூர் சாலை கும்மிருட்டு; பீதியில் பயணிக்கும் வாகன ஓட்டிகள்

 நெமிலிச்சேரி - திருநின்றவூர் சாலை கும்மிருட்டு; பீதியில் பயணிக்கும் வாகன ஓட்டிகள்

 நெமிலிச்சேரி - திருநின்றவூர் சாலை கும்மிருட்டு; பீதியில் பயணிக்கும் வாகன ஓட்டிகள்


ADDED : டிச 29, 2025 06:44 AM

Google News

ADDED : டிச 29, 2025 06:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநின்றவூர்: சென்னை - திருத்தணி தேசிய நெடுஞ்சாலையில், நெமிலிச்சேரியில் இருந்து திருநின்றவூர் வரை கும்மிருட்டாக உள்ளதால், இரவு வேளையில் பீதியுடனே வாகன ஓட்டிகள் பயணிக்கின்றனர்.

நெமிலிச்சேரியில் இருந்து திருநின்றவூர் வரை 4 கி.மீ., சாலையை ஒட்டி நெமிலிச்சேரி ஊராட்சி, நடுக்குத்தகை ஊராட்சி மற்றும் திருநின்றவூர் நகராட்சி பகுதிகளில் 50,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.

அதேபோல, டாட்டா ஸ்டீல் ஆலை, டி.ஐ., சைக்கிள் நிறுவனம் மற்றும் தாம்பரம் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில், தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

இப்பகுதியில், சரிவர மின் விளக்குகள் எரியாததால், சாலை கும்மிருட்டாக மாறியுள்ளது. பல இடங்களில் சாலை சேதமடைந்து, வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.

இது குறித்து பலமுறை புகார் அளித்தும், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

வெளிவட்ட சாலையில் பாதுகாப்பு கேள்விக்குறி

ஆவடி அடுத்த பட்டாபிராம், நெமிலிச்சேரி அருகே சென்னை - திருத்தணி தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில், ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது. நெமிலிச்சேரி ரவுண்டானா கீழ், நெமிலிச்சேரி அணுகு சாலையில் இரு மார்க்கத்திலும் மின் விளக்கு இல்லாமல் இருள் சூழ்ந்துள்ளது. நள்ளிரவு வேளைகளில் கும்மிருட்டை பயன்படுத்தி குற்றச்செயல்கள் அரங்கேறுகின்றன. அதேபோல, அணுகு சாலையோரம் மர்ம நபர்கள் குப்பை கொட்டி வருகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us