sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மவுன்ட் - பூந்தமல்லி நெடுஞ்சாலை படுமோசம்

/

மவுன்ட் - பூந்தமல்லி நெடுஞ்சாலை படுமோசம்

மவுன்ட் - பூந்தமல்லி நெடுஞ்சாலை படுமோசம்

மவுன்ட் - பூந்தமல்லி நெடுஞ்சாலை படுமோசம்


ADDED : அக் 14, 2024 03:17 AM

Google News

ADDED : அக் 14, 2024 03:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நந்தம்பாக்கம்:நந்தம்பாக்கம் மவுன்ட் -- பூந்தமல்லி நெடுஞ்சாலையில், குடிநீர் வாரிய பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தை முறையாக சீரமைக்காததால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதிக துாசி பறப்பதால், வாகன ஓட்டிகள் கண் எரிச்சலால் அவதிப்பட்டு வருகின்றனர்.

ஆலந்துார் மண்டலம், நந்தம்பாக்கம் பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக மவுன்ட் -- பூந்தமல்லி நெடுஞ்சாலை நடுவே, இரவு நேரத்தில் குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது.

கடந்த சில நாட்களாக நந்தம்பாக்கம், வர்த்தக மையம் எதிரே, குடிநீர் வாரியம் சார்பில் பாதாள சாக்கடை திட்டத்திற்கான குழாய் பதிக்கப்பட்டது. இப்பணிகள் கடந்த ஒரு மாதமாக நடந்து வருகின்றன.

அதற்காக தோண்டிய பள்ளம் முறையாக மூடப்படவில்லை. அந்த பள்ளத்தில் கொட்டப்பட்ட ஜல்லி கற்கள் பெயர்ந்து, சாலையில் சிதறியுள்ளன.

அத்துடன், சாலை வெட்டு மேற்கொண்ட பகுதிகள், ஆங்காங்கே உள்வாங்கி பள்ளமாக மாறி உள்ளன. இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

தற்போது பெய்து வரும் மழையில், சாலை சேறும் சகதியுமாக மாறுவதுடன், வெயில் நேரத்தில் துாசி பறந்து இருசக்கர வாகன ஓட்டிகள் கண் எரிச்சலால் அவதிப்படுகின்றனர்.

மேலும், மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடப்பதால் சாலை குறுகி, இந்த நெரிசலால் தினசரி வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

அத்துடன், நடைபாதை உடைந்துள்ளதால், பாதசாரிகள் நடக்க முடியாத நிலை உள்ளது.

பரங்கிமலை, பட்ரோடு, நந்தம்பாக்கம் பகுதிகளில், பூந்தமல்லி சாலை- ஆர்மி ரோடு சந்திப்பு முதல் கத்திப்பாரா மேம்பாலம் வரை, மெட்ரோ ரயில் பணிகள் நடக்கின்றன.

நந்தம்பாக்கத்தில் இருந்து கத்திப்பாரா வரை, போக்குவரத்து மாற்றம் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது. இதனால், காலை மற்றும் மாலை நேரங்களில், கடும் நெரிசல் நிலவி வருகிறது.

சென்னை மற்றும் புறநகரின் முக்கிய பகுதிகளை இணைக்கும் முக்கிய சாலை என்பதால், போர்க்கால அடிப்படையில் பணிகளை முடித்து, இந்த சாலையை உடனே சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரியுள்ளனர்.

இதுகுறித்து, நந்தம்பாக்கத்தைச் சேர்ந்த கே.முத்துக்குமார், 63, கூறியதாவது:

இச்சாலையில் கடந்த ஒரு மாதமாக, இரவு நேரத்தில் சாலையில் பள்ளம் தோண்டி குழாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஆனால், பள்ளத்தை முறையாக சீரமைக்காததால், துாசி பறந்து வருகிறது.

வேகமாக வரும் கார் உள்ளிட்ட வாகனங்கள் பள்ளங்களில் பெரும் சத்தத்துடன் விழுந்து செல்கின்றன. இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி விழும் நிலையும் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us