sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 07, 2026 ,மாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 1,000 'ஏசி' மின்சார பஸ்களுக்கு எம்.டி.சி., டெண்டர் வெளியீடு

/

 1,000 'ஏசி' மின்சார பஸ்களுக்கு எம்.டி.சி., டெண்டர் வெளியீடு

 1,000 'ஏசி' மின்சார பஸ்களுக்கு எம்.டி.சி., டெண்டர் வெளியீடு

 1,000 'ஏசி' மின்சார பஸ்களுக்கு எம்.டி.சி., டெண்டர் வெளியீடு


ADDED : மார் 07, 2026 05:52 AM

Google News

ADDED : மார் 07, 2026 05:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னையில், 1,000 'ஏசி' மின்சார பேருந்துகள் இயக்க, மாநகர போக்கு வரத்து கழகம் புதிய டெண் டர் வெளியிட்டுள்ளது.

சென்னை மாநகர போக்கு வரத்து கழகமான, எம்.டி.சி., யில் தற்போது, 700க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் தினமும், 3,500 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றின் வாயிலாக தினமும், 34 லட்சம் பேர் பயணித்து வருகின்றனர்.

சென்னையில் எல்லை நாளுக்குள் நாள் விரிவடைந்து வருகிறது. அதற்கேற்ப, கூடுதல் பேருந்துகளை இயக்கும் முயற்சியில், எம்.டி.சி., ஈடுபட்டு வருகிறது.

இதுகுறித்து, எம்.டி.சி., அதிகாரிகள் கூறியதாவது:

எம்.டி.சி., சார்பில், 3,500 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. சென்னை புறநகர் பகுதிகள் வேகமாக வளர்ந்து வருவதால், 2030ல் மாநகர பேருந்துகளின் தேவை, 7,214 ஆக இருக்கும் என, கணிக்கப்பட்டு உள்ளது.

எனவே, உலக வங்கி மற்றும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி பங்களிப்புடன், சென்னை பெருநகர கூட்டாண்மை திட்டத்தின்கீழ், முதற்கட்டமாக, 624 மின்சார பேருந்துகளின் சேவை துவங்கப் பட்டுள்ளது.

அடுத்தகட்டமாக, 750 மின்சார பேருந்துகள் இயக்க டெண்டர் வெளியிட்டு, நிறுவனம் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.

இதற்கிடையே, 1,000 'ஏசி' மின்சார பேருந்துகள் இயக்க டெண்டர் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த பேருந்துகள் அடுத்த ஒரு ஆண்டில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். கடந்த 2027ல், மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளின் எண்ணிக்கையை, 5,406 ஆக உயர்த்த உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us