sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

500 தனியார் மின்சார பஸ்கள் இயக்க 100 வழித்தடம் தேடுகிறது எம்.டி.சி.,

/

500 தனியார் மின்சார பஸ்கள் இயக்க 100 வழித்தடம் தேடுகிறது எம்.டி.சி.,

500 தனியார் மின்சார பஸ்கள் இயக்க 100 வழித்தடம் தேடுகிறது எம்.டி.சி.,

500 தனியார் மின்சார பஸ்கள் இயக்க 100 வழித்தடம் தேடுகிறது எம்.டி.சி.,


ADDED : அக் 26, 2024 02:41 AM

Google News

ADDED : அக் 26, 2024 02:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:'சென்னையில் இயக்கப்பட உள்ள, 500 தனியார் மின்சார பஸ்களுக்காக, 100 வழித்தடங்கள் தேர்வு செய்யும் பணி துவங்கப்பட்டுள்ளது' என, மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் தற்போது, 700க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் தினமும், 3,454 பஸ்கள் இயக்கப்படுகின்றன. சாதாரண கட்டணம் - 1,559, விரைவு மற்றும் சொகுசு - 1,674, 'ஏ.சி' - 48, சிறிய பஸ்கள் - 207 இயக்கப்படுகின்றன. இவற்றின் வாயிலாக தினமும், 28.70 லட்சம் பேர் பயணம் செய்து வருகின்றனர்.

சென்னையில் எல்லை நாளுக்குள் நாள் விரிவடைந்து வருகிறது. கிளாம்பாக்கத்தில் புதிய பஸ் நிலையமும் திறக்கப்பட்டுள்ளதால், கூடுதல் பஸ்களை இயக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

எனவே, மாநகர போக்குவரத்து கழகத்தின் கீழ், ஒப்பந்த அடிப்படையில் தனியார் பேட்டரி பஸ்களை இயக்க டெண்டர் வெளியிட்டு, முதற்கட்டமாக, 500 தனியார் மின்சார பஸ்களை இயக்க ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த பஸ்கள் அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் படிப்படியாக பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது.

இதுகுறித்து, மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:

அடுத்த ஐந்து ஆண்டுகளில், சென்னை மாநகர பஸ்களின் தேவை, 7,000 ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதை, மாநகர போக்குவரத்து கழகத்தால் மட்டுமே முழுமையாக பூர்த்தி செய்ய முடியாது. எனவே, கட்டண உயர்வு இன்றி, தனியார் நிறுவனங்களின் பங்களிப்போடு, 1,000 மின்சார பஸ்களை இயக்க உள்ளோம்.

முதற்கட்டமாக, 100 'ஏசி' பஸ்கள் உட்பட, 500 மின்சார பஸ்களை இயக்க, அசோக் லைலாண்டு நிறுவனத்தின் துணை நிறுவனமான, 'ஓ.எச்.எம்.குளோபல் மொபிலிடி பிரைவேட் லிமிடெட்' நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தின்படி, 12 ஆண்டுகள் பஸ்களை பராமரித்து இயக்குவது, உட்கட்டமைப்பை ஏற்படுத்துவது, ஓட்டுனரின் பணியமர்த்துவது உள்ளிட்டவை ஒப்பந்ததாரரின் பணி.

மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் நடத்துனர் நியமிக்கப்பட்டு, வழக்கமான கட்டணத்தில் பொதுமக்கள் பயணிக்கலாம். ஒப்பந்ததாரருக்கு கி.மீ., ஒன்றுக்கு 'ஏசி' வசதி இல்லாத மின்சார பஸ்களுக்கு, 77.16 ரூபாய், ஏசி பஸ்களுக்கு 80.86 ரூபாய், மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பாக வழங்க நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த பஸ்கள் ஒரு முறை சார்ஜ் செய்தால் சராசரியாக, 180 கி.மீ., இயக்க இயலும். பெரும்பாக்கம், தண்டையார்பேட்டை, பூந்தமல்லி, வியாசர்பாடி மற்றும் பெரம்பூர் ஆகிய பணிமனைகளில் இருந்து, சென்னை மாநகரின் அனைத்து பகுதிகளையும் இணைத்திடும் வகையில் பஸ்கள் இயக்கப்படும்.

தனியார் இயக்கும் 500 மின்சார பஸ்களில், 50 சதவீத பஸ்கள் ஏற்கனவே செல்லும் வழித்தடங்களில் கூடுதலாக இயக்கப்படும். மீதமுள்ள 50 சதவீத பஸ்கள் புது வழித்தடங்களில் இயக்க உள்ளோம். இதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல், இந்த பஸ்கள் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us