/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பல்நோக்கு கட்டடம் பயன்பாட்டிற்கு திறப்பு
/
பல்நோக்கு கட்டடம் பயன்பாட்டிற்கு திறப்பு
ADDED : பிப் 24, 2026 05:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அண்ணா நகர்: கிழக்கு அண்ணா நகரில், 34 லட்சம் ரூபாயில் கட்டப்பட்ட பல்நோக்கு கட்டடம், மக்கள் பயன்பாட்டிற்கு நேற்று திறக்கப்பட்டது.
அண்ணா நகர் மண்டலம், 102வது வார்டு, கிழக்கு அண்ணா நகர், 'என் பிளாக்' 24வது தெருவில், சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடம் , நீண்ட காலம் பயன்பாடின்றி கிடந்தது.
எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் பல்நோக்கு கட்டடம் கட்ட, மாநகராட்சி முடிவெடுத்தது. 34 லட்சம் ரூபாய் செலவில், 500 சதுர அடியில் கட்டடம் கட்டப்பட்டு, மக்கள் பயன்பாட்டி ற்கு நேற்று திறக்கப்பட்டது.
அண்ணா நகர் தி.மு.க., - எம்.எல்.ஏ., மோகன், மண்டல அதிகாரி உள்ளிட்டோர் திறந்து வைத்தார்.

