ADDED : டிச 17, 2025 05:44 AM

சென்னை: 'தெய்வத் தமிழிசை விழா' சார்பில், 36ம் ஆண்டு மார்கழி வடசென்னை இசை விழா, வண்ணாரப்பேட்டை, கோதண்டராமர் கோவிலில் நேற்று துவங்கியது.
காஞ்சி காமகோடி பீடம் ஆஸ்தான வித்வான் பாலமுருகன் குழுவினரின் நாதஸ்வர நல்லிசையுடன், நிகழ்ச்சி துவங்கியது. 'சஞ்சீவினி நர்சிங் ஹோம்' உரிமையாளர் டாக்டர் தனலட்சுமி குத்து விளக்கேற்றி, இசை விழாவை துவக்கி வைத்தார்.
நாளை, 'கலைமாமணி' விருது பெற்ற சற்குருநாதன் ஓது வாரின் திருமுறை இசையும் நாளை மறுநாள் முனைவர் மா.கி.ரமணனின் சொற்பொழிவும் நடக்கிறது.
தினமு ம் காலை 6:30 மணி முத ல் 8:30 மணி வரை பிரபல கர்நாடக சங்கீத கலைஞர்களின் வாய்ப்பாட்டு, புல்லாங்குழல், வீணை, வயலின் இசை கச்சேரியும், ஆன்மிக சொற்பொழிவும் நடக்கவுள்ளது.
வரும் ஜன., 14ம் தேதி வரை நடைபெறும், வடசென்னையில் நடக்கும் ஒ ரே இசை விழாவான இந்த கச்சேரிக்கு அனைவரும் வரவேண்டும் என, நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
வழக்கறிஞர் துரை ராஜ், தொழிலதிபர் மாரிமுத்து பங்கேற்றனர். முனைவர் மா.கி.ரமணன், டாக்டர் மகாலிங்கம் ஆகியோர், நிகழ்ச்சிக்கான ஏ ற்பாடுகளை செய்துள்ளனர்.

