sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

துாசு வளையத்தில் சிக்கி தவிக்கும் நந்தம்பாக்கம்

/

துாசு வளையத்தில் சிக்கி தவிக்கும் நந்தம்பாக்கம்

துாசு வளையத்தில் சிக்கி தவிக்கும் நந்தம்பாக்கம்

துாசு வளையத்தில் சிக்கி தவிக்கும் நந்தம்பாக்கம்


UPDATED : பிப் 20, 2024 04:01 AM

ADDED : பிப் 20, 2024 12:59 AM

Google News

UPDATED : பிப் 20, 2024 04:01 AM ADDED : பிப் 20, 2024 12:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நந்தம்பாக்கத்தில் செயல்படும் தனியார் கட்டுமான நிறுவன சிமென்ட் கலவைக் கூடத்தால், சுற்று வட்டாரத்தில் நுாற்றுக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்படுவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னை, நந்தம்பாக்கத்தில், 'டிட்கோ' எனும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் சார்பில், 56 ஏக்கர் பரப்பளவில், 'பின்டெக் சிட்டி' அமைக்கப்படுகிறது.

அதன் ஒரு பகுதிக்கான கட்டுமானப் பணியை, நாமக்கல்லை சேர்ந்த பி.எஸ்.டி. பொறியியல் கட்டுமான நிறுவனம் ஒப்பந்தம் எடுத்துள்ளது.

கட்டுமானப் பணிக்கு தேவையான சிமென்ட் கலவை தயாரிப்பதற்கான கலவைக் கூடம், நந்தம்பாக்கம், வேம்புலியம்மன் கோவில் தெருவை ஒட்டியுள்ள காலி மனையில் உள்ளது.

இந்த கூடத்தில் இரவு, பகலாக சிமென்ட் கலவை தயாரித்து, லாரிகளில் ஏற்றி, கட்டுமான இடத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இதனால் துாசு பறந்து, சுற்று வட்டார பகுதிகளில் வசிப்போர் மிகவும் தவிக்கினறனர்.

இதுகுறித்து, குடியிருப்புவாசிகள் கூறியதாவது:

கடந்த ஆண்டு டிச., மாதம், இந்த சிமென்ட் கலவைக் கூடம் அமைக்கும்போதே எதிர்ப்பு தெரிவித்தோம். எனினும், கலவைக்கூடம் அமைக்கப்பட்டது.

ஆலையைச் சுற்றி தடுப்பு, கூடாரம் எதுவும் ஏற்படுத்தாமல், திறந்தவெளியில் செயல்படுவதால், சிமென்ட் கலவை துாசி பறந்து, சுற்றிஉள்ள குடியிருப்புகள், பொருட்கள், உணவுகள் என, அனைத்தின் மீதும் படர்ந்து வருகிறது. தவிர, காற்று மாசும் அதிகரித்துள்ளது.

வீடுகளில் உள்ள கிணறுகளின் நிலத்தடி நீர் மாசடைந்து வருகிறது. இங்கு வசிக்கும் சிறார்கள், முதியோருக்கு, அடிக்கடி சுவாசக்கோளாறு ஏற்பட்டு, மருத்துவமனைக்கு செல்ல வேண்டியதாகிறது.

மேலும், இரவு, பகலாக செல்லும் வாகனங்கள், கலவை இயந்திரத்தின் சத்தத்தால் துாக்கம் இன்றி தவிக்கிறோம். இரு மாதங்களாக பாதிக்கப்படும் எங்கள் பிரச்னைக்கு தீர்வு காண, மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு புகார் அளித்தோம்.

இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வார்டு கவுன்சிலர், மாநகராட்சி அதிகாரிகளுக்கும் புகார் அளித்தோம். அவர்களும் கண்டுகொள்ளவில்லை.

சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us