/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் 21ல் நவராத்திரி விழா துவக்கம்
/
மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் 21ல் நவராத்திரி விழா துவக்கம்
மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் 21ல் நவராத்திரி விழா துவக்கம்
மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் 21ல் நவராத்திரி விழா துவக்கம்
ADDED : செப் 18, 2025 12:30 AM
மாங்காடு, மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 21ல் துவங்கி, அக்., 2ம் தேதி வரை நடக்கிறது.
குன்றத்துார் அருகே மாங்காட்டில் பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் நவராத்திரி விழா 12 நாட்கள் கோலகலமாக நடைபெறும். இந்தாண்டு நவராத்திரி விழா வரும் 21ல் துவங்கி, அக்.,2ம் தேதி வரை நடக்கிறது.
விழாவில் தினமும் மீனாட்சி, லட்சுமி, ராஜராஜேஸ்வரி, அன்னபூரணி, கஜலட்சுமி, சந்தானலட்சுமி, மகிஷாசூரமர்த்தினி மற்றும் சரஸ்வதி அலங்காரம், அம்மனுக்கு சாற்றப்படும்.
காலை 8.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை இசை, நாட்டியம், சொற்பொழிவு, பக்தி கச்சேரி உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் கோவில் வளாகத்தில் நடைபெற உள்ளன.
தொடர்ந்து புரட்டாசி பவுர்ணமி தினமான அக்.,6ம் தேதி மாலை 6.00 மணிக்கு காமாட்சி அம்மன் கோவில் மற்றும் கோவிலின் உபகோவிலான வெள்ளீஸ்வரர் கோவிலிலும் இனிப்பு, பலகார வகைகள், காய்கனிகள் மற்றும் தானிய வகைகளால் அலங்காரம் செய்து, நிறைமணி காட்சி விழா நடைபெற உள்ளது.
---