sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

போர் வீரர்கள் நினைவிடத்தில் என்.சி.சி., வீரர்கள் மரியாதை

/

போர் வீரர்கள் நினைவிடத்தில் என்.சி.சி., வீரர்கள் மரியாதை

போர் வீரர்கள் நினைவிடத்தில் என்.சி.சி., வீரர்கள் மரியாதை

போர் வீரர்கள் நினைவிடத்தில் என்.சி.சி., வீரர்கள் மரியாதை


ADDED : நவ 25, 2024 03:09 AM

Google News

ADDED : நவ 25, 2024 03:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:'தேசிய மாணவர் படை தினத்தையொட்டி, சென்னையில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து, மரியாதை செலுத்தப்பட்டது.

உலகிலேயே மிகப்பெரிய இளைஞர் அமைப்பான, என்.சி.சி., அமைப்பு, 1948 நவ., 23ல் உருவாக்கப்பட்டது. அதன் 76வது ஆண்டுவிழா நேற்று நடந்தது. அதையொட்டி, சென்னை போர் வீரர்கள் நினைவிடத்தில் நடந்த நிகழ்ச்சியில், இந்திய ராணுவ தெற்கு பகுதி தளபதி லெப்டினண்ட் ஜெனரல் கரன்பீர்சிங் பிரார், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மலர் வளையம் வைத்து, மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சிக்கு வந்த லெப்டினண்ட் ஜெனரல் கரன்பீர்சிங் பிராரை, தமிழகம், புதுச்சேரி மற்றும் அந்தமான் - நிக்கோபார் உள்ளடக்கிய என்.சி.சி., அமைப்பின் துணை தலைமை இயக்குனர் கமோடர் எஸ்.ராகவ் வரவேற்றார். என்.சி.சி., கமாண்டர்கள் மற்றும் உயரதிகாரிகளுக்கு, கே.எஸ்.பிரார் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

நிகழ்ச்சியின் ஒரு அம்சமாக, சென்னையை மையமாகக் கொண்ட என்.சி.சி., 13வது பட்டாலியன் இளம் வீரர்கள் குழு, கம்பீரமான அணிவகுப்பு நடத்தினர்.






      Dinamalar
      Follow us