sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சாலையில் விளையாடிய சிறுவனை கடித்து குதறிய பக்கத்து வீட்டு நாய்

/

சாலையில் விளையாடிய சிறுவனை கடித்து குதறிய பக்கத்து வீட்டு நாய்

சாலையில் விளையாடிய சிறுவனை கடித்து குதறிய பக்கத்து வீட்டு நாய்

சாலையில் விளையாடிய சிறுவனை கடித்து குதறிய பக்கத்து வீட்டு நாய்


ADDED : மே 06, 2025 11:41 PM

Google News

ADDED : மே 06, 2025 11:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போரூர், வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை, பக்கத்து வீட்டுக்காரர் வளர்த்து வரும் தெரு நாய் கடித்து குதறியது.

சென்னை போரூர், காரம்பாக்கம் சமயபுரம் பிரதான சாலையை சேர்ந்தவர் வெங்கடேசன், 33. இவரது மகன் மோனிஷ், 6.

நேற்று முன்தினம் இரவு சிறுவன் மோனிஷ், வீட்டின் அருகே தயாராருடன் விளையாடிக் கொண்டு இருந்தார்.

அப்போது, பக்கத்து வீட்டில் வளர்க்கப்பட்டு வரும் தெரு நாய், திடீரென சிறுவன் மீது பாய்ந்து, இடது கையில் கடித்தது.

அலறி அடித்து ஓடிய சிறுவன், பயத்தில் அங்கிருந்த கல்லில் தடுக்கி கீழே விழுந்தார்.

இதனால், சிறுவனின் முகம் மற்றும் காதின் பின்புறம் காயம் ஏற்பட்டது. சிறுவனின் தந்தை மற்றும் அங்கிருந்தோர் சிறுவனை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை பெற்று, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதில், சிறுவனின் காதின் பின்புறம் நான்கு தையல்கள் போடப்பட்டு, டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். வளசரவாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

***






      Dinamalar
      Follow us