sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கலை திருவிழா போட்டியில் நெட்டுக்குப்பம் மாணவி அசத்தல்

/

கலை திருவிழா போட்டியில் நெட்டுக்குப்பம் மாணவி அசத்தல்

கலை திருவிழா போட்டியில் நெட்டுக்குப்பம் மாணவி அசத்தல்

கலை திருவிழா போட்டியில் நெட்டுக்குப்பம் மாணவி அசத்தல்


ADDED : நவ 19, 2024 12:41 AM

Google News

ADDED : நவ 19, 2024 12:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எண்ணுார்,

கலைதிருவிழா போட்டியின், மழலையர் பாடல் ஒப்புவித்தல் பிரிவில், நெட்டுகுப்பம் நடுநிலைப் பள்ளி மாணவி, மாநில அளவிலான போட்டிக்கு தேர்வானார்.

தமிழக பள்ளிக்கல்வி துறை சார்பில், கலை திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, 14 ம் தேதி, சென்னை மாவட்ட அளவிலான போட்டிகள், எழும்பூர் - மாகாண மகளிர் பள்ளியில் நடந்தது.

இந்த போட்டிகளில், சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட, அரசு, மாநகராட்சி பள்ளிகளை சேர்ந்த மாணவ - மாணவியர் பங்கேற்றனர். இதில், 1 - 2 ம் வகுப்பு மாணவர்களுக்கான, மழலையர் பாடல் ஒப்புவித்தல் பிரிவில், எண்ணுார் - நெட்டுக்குப்பம், சென்னை நடுநிலைப் பள்ளி இரண்டாம் வகுப்பு மாணவி இ.பிரதிக் ஷா, முதலிடம் பிடித்தார். மாவட்ட அளவில் முதலிடம் பிடித்ததால், கோவையில், டிச., 3ல் நடக்கும், மாநில அளவிலான போட்டிக்கு, அவர் தேர்வாகினார்.

அதே போல், 3 - 5 ம் வகுப்பு மாணவர்களுக்கான, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில், மூன்று நிமிடத்தில், 80 திருக்குறள்களை ஒப்புவித்த, இந்த பள்ளியின் மூன்றாம் வகுப்பு மாணவர் டி.சங்கீத், இரண்டாமிடம் பிடித்தார்.

வெற்றி பெற்ற மாணவர்களை, பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் வெகுவாக பாராட்டினர்.






      Dinamalar
      Follow us