/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நியூ பிரின்ஸ் சி.பி.எஸ்.இ., பள்ளி 10ம் வகுப்பு, பிளஸ் 2வில் 'சென்டம்'
/
நியூ பிரின்ஸ் சி.பி.எஸ்.இ., பள்ளி 10ம் வகுப்பு, பிளஸ் 2வில் 'சென்டம்'
நியூ பிரின்ஸ் சி.பி.எஸ்.இ., பள்ளி 10ம் வகுப்பு, பிளஸ் 2வில் 'சென்டம்'
நியூ பிரின்ஸ் சி.பி.எஸ்.இ., பள்ளி 10ம் வகுப்பு, பிளஸ் 2வில் 'சென்டம்'
ADDED : மே 17, 2025 12:32 AM
சென்னை :சென்னை, உள்ளகரத்தில் உள்ள நியூ பிரின்ஸ் ஸ்ரீ பவானி சீனியர் செகண்டரி பள்ளி, ஆதம்பாக்கத்தில் உள்ள சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 10ம் வகுப்பு, பிளஸ் 2வில் பொதுத்தேர்வு எழுதிய மாணவ - மாணவியர் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
உள்ளகரம் பள்ளியில், 2024 - 25ம் ஆண்டு 10ம் வகுப்பு தேர்வெழுதிய 76 மாணவர்களும், முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அவர்களில், ஜிசேஷ்குமார் 481; அஸ்வத் 475; சூரஜ் 474 மதிப்பெண்கள் பெற்று, முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர்.
பிளஸ் 2 தேர்வெழுதிய 49 மாணவர்களும், முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களில் தனுஷ், கணினி அறிவியல் பாடத்தில் 100 மதிப்பெண்களுடன் மொத்தம் 487 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். கவின் 465; முகுந்த் 461 மதிப்பெண்களுடன், அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர்.
ஆதம்பாக்கத்தில் உள்ள நியூ பிரின்ஸ் ஸ்ரீ பவானி சீனியர் செகண்டரி சி.பி.எஸ்.இ., பள்ளியில், 10ம் வகுப்பு தேர்வெழுதிய 76 மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அவர்களில் நிகிதா 488; ஸ்ரேயாகுமாரி, கணிதத்தில் 100 மதிப்பெண்களுடன் 485; சோம்நாத் சக்திவேல் 485; கதிர்ஹான் 483 மதிப்பெண்கள் பெற்று, முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளனர்.
பிளஸ் 2 தேர்வெழுதிய, 55 மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், தகவல் தொழில்நுட்ப பாடத்தில் 100 மதிப்பெண்களுடன் ஜானவி 484; ஹர்ஷிதா 468; கிரிஷ் 467 மதிப்பெண்களுடன் முதல் மூன்று இடங்களை பெற்றுள்ளனர்.
தேர்வில் வெற்றி பெற்ற மாணவ - மாணவியரை நியூ பிரின்ஸ் கல்விக் குழும தலைவர் லோகநாதன், செயலர் மற்றும் ஆதம்பாக்கம் பள்ளி முதல்வர் வி.எஸ்.மகாலட்சுமி, உள்ளகரம் பள்ளி முதல்வர் வீணா இளங்கோ உள்ளிட்டோர் வாழ்த்தினர். முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.