sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

செய்திகள் சில வரிகளில்

/

செய்திகள் சில வரிகளில்

செய்திகள் சில வரிகளில்

செய்திகள் சில வரிகளில்


ADDED : ஆக 06, 2025 12:17 AM

Google News

ADDED : ஆக 06, 2025 12:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திரு.வி.க.நகர் பேருந்து நிலையம் எதிரே உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடந்த, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில், பல்வேறு கோரிக்கைகளுக்காக மொத்தம் 3006 மனுக்கள் பெறப்பட்டன. இதில் மகளிர் உரிமைத் தொகை கோரி 1,955 மனுக்கள் தரப்பட்டன. 500க்கும் மேற்பட்ட மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு, அங்கேயே சான்று வழங்கப்பட்டது.



கத்தியுடன் சுற்றிதிரிந்த நான்கு வாலிபர்கள் கைது

அம்பத்தூர்,அம்பத்தூர், ஒரகடம், புழல் ஏரிக்கரை அருகே, வாலிபர்கள் சிலர் கத்தியுடன் சுற்றிதிரிவதாக அம்பத்தூர் போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. அதன்படி, போலீசார், அங்கு கத்தியுடன் சுற்றிதிரிந்த நான்கு வாலிபர்களை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்தனர்.

பின், விசாரணையில் ஒரகடம் பகுதியைச் சேர்ந்த மோனிஷ் குமார், 18 ; ஹரிஷ், 22, கார்த்திக், 22 மற்றும் ஜான், 18, என தெரிந்தது. இதில், மோனிஷ் குமார் மீது கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. இவர்களுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு கும்பலுக்கும் முன் விரோதம் இருந்துள்ளது.

இதனால், தங்களது பாதுகாப்புக்காக கத்தியை வைத்திருந்ததாக அவர்கள் தெரிவித்தனர். நான்கு பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று மாலை சிறையில் அடைத்தனர்.

போதை மாத்திரை விற்ற ரவுடி கைது

வியாசர்பாடி, போதை மாத்திரைகள் விற்ற ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

வியாசர்பாடி, கல்யாணபுரம் அருகே போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, போதை மாத்திரைகளை மறைத்து வைத்து விற்பனை செய்த, 'பி' கல்யாணபுரத்தை சேர்ந்த, ரவுடி அஜித்குமார், 30 என்பவரை, போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த, 75 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us