sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

செய்திகள் சில வரிகளில்...

/

செய்திகள் சில வரிகளில்...

செய்திகள் சில வரிகளில்...

செய்திகள் சில வரிகளில்...


ADDED : செப் 22, 2025 03:13 AM

Google News

ADDED : செப் 22, 2025 03:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏரியில் பெண்

சடலம் மீட்பு

தாம்பரம் அருகே சிட்லப்பாக்கம் பெரிய ஏரியில் நேற்று காலை பெண் உடல் மிதந்துள்ளது. இது குறித்து, ஏரிக்கரை பூங்காவில் நடைபயிற்சி மேற்கொண்டவர்கள், சிட்லப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். இதில், சிட்லப்பாக்கம் எம்.ஜி.ஆர்.நகரைச் சேர்ந்த ஏகவள்ளி, 75, என்பது தெரிய வந்தது. அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தவறி விழுந்து இறந்தாரா என போலீசார் விசாரிக்கின்றனர்.

குட்கா

விற்றவருக்கு

ரூ.25,000 அபராதம்

கே.கே நகர், ராஜமன்னார் சாலை பகுதியில், போதை புகையிலை விற்பனையில் ஈடுபட்ட, அசோக் நகரைச் சேர்ந்த மோகன், 45 என்பவரை, கே.கே.நகர் போலீசார் நேற்று கைது செய்தனர்.

அவரிடம் இருந்து 1.5 கிலோ ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவரை கைது செய்த போலீசார், காவல் நிலைய ஜாமினில் விடுவித்தனர். அத்துடன், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உணவு பாதுகாப்பு துறையினர் மோகனுக்கு, 25,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.

போலீசுக்கு 'டிமிக்கி'

கொடுத்தவர் கைது

புளியந்தோப்பு, சுந்தராபுரத்தைச் சேர்ந்தவர் பிரசாந்த், 28; ரவுடியாக வலம் வந்த இவர் மீது, 16 வழக்குகள் உள்ளன.

இவர், குற்ற வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானதால், இவரை பிடிக்க நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்து, பேசின் பாலம் போலீசாருக்கு உத்தரவிட்டது.

இந்த நிலையில், மீஞ்சூர் பகுதியில் பதுங்கி இருந்த பிரசாந்தை, பேசின் பாலம் போலீசார் நேற்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us