/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நீலகிரி ரயில் இன்ஜின் பழுது புறநகர் ரயில் சேவை பாதிப்பு
/
நீலகிரி ரயில் இன்ஜின் பழுது புறநகர் ரயில் சேவை பாதிப்பு
நீலகிரி ரயில் இன்ஜின் பழுது புறநகர் ரயில் சேவை பாதிப்பு
நீலகிரி ரயில் இன்ஜின் பழுது புறநகர் ரயில் சேவை பாதிப்பு
ADDED : நவ 13, 2024 02:22 AM

கொருக்குப்பேட்டை:நீலகிரி எக்ஸ்பிரஸ் விரைவு ரயில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு, வழக்கம்போல் நேற்று காலை வந்தது.
பயணியரை இறக்கிவிட்ட பின், எண்ணுார் ரயில்வே பணிமனைக்கு சென்று கொண்டிருந்தது.
காலை 9:30 மணிக்கு, கொருக்குப்பேட்டை ரயில் நிலையம் அருகே, நீலகிரி விரைவு ரயிலின் இன்ஜின் பழுதாகி நின்றது.
இதனால் அந்த தடத்தில், கும்மிடிப்பூண்டியில் இருந்து எண்ணுார், திருவொற்றியூர் மார்க்கமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வரும் புறநகர் மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
சென்ட்ரலில் இருந்து பேசின் பாலம், கொருக்குப்பேட்டை வழியாக திருவொற்றியூர், எண்ணுார், கும்மிடிப்பூண்டி வரை செல்லும் ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் ரயில் பயணியர் அவதிக்குள்ளாகினர்.
ரயில்வே ஊழியர்கள், மாற்று இன்ஜின் பொருத்தி, நேற்று காலை 10:00 மணிக்கு, நீலகிரி விரைவு ரயிலை எண்ணுார் பணிமனைக்கு ஓட்டிச் சென்றனர்.
இதையடுத்து, புறநகர் மின்சார ரயில்கள் புறப்பட்டுச் சென்றன. அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.