/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மருத்துவ சிகிச்சைக்கான பில் இல்லை காப்பீடு மறுத்த நிறுவனத்துக்கு 'குட்டு'
/
மருத்துவ சிகிச்சைக்கான பில் இல்லை காப்பீடு மறுத்த நிறுவனத்துக்கு 'குட்டு'
மருத்துவ சிகிச்சைக்கான பில் இல்லை காப்பீடு மறுத்த நிறுவனத்துக்கு 'குட்டு'
மருத்துவ சிகிச்சைக்கான பில் இல்லை காப்பீடு மறுத்த நிறுவனத்துக்கு 'குட்டு'
ADDED : அக் 26, 2024 03:14 AM
சென்னை:சென்னை சவுகார்பேட்டையைச் சேர்ந்த சுவபாய், சம்பாலால் ஆகியோர் தாக்கல் செய்த மனு:
சேத்துப்பட்டில் உள்ள 'மேத்தா' என்ற தனியார் மருத்துவமனையில், கடந்த 2021ல் உடல் நலக்குறைவுக்காக ஐந்து நாட்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோம். சிகிச்சைக்கு 1.20 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என, மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
ஹைதராபாத்தை தலைமையிடமாக வைத்து செயல்படும் டாஜிக் ஏ.ஐ.ஜி., என்ற காப்பீடு நிறுவனத்திடம் மருத்துவ காப்பீடு எடுத்த விபரங்கள் வழங்கப்பட்டன. மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தல்படி, மருத்துவ சிகிச்சைக்கான பில்களை இணைத்து விண்ணப்பித்தோம்.
ஆனால், காப்பீட்டு நிறுவனம் விதிகளின்படி அசல் பில்களை இணைத்து விண்ணப்பித்தால் மட்டுமே, பரிசீலனை செய்ய முடியும் எனக்கூறி, எங்கள் கோரிக்கையை நிராகரித்தது.
காப்பீட்டு நிறுவனம் விண்ணப்பத்தை நிராகரித்ததால், 1.20 லட்சம் ரூபாயை கடனாக வாங்கி மருத்துவமனைக்கு செலுத்தினோம். இதனால், தங்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு 50,000 இழப்பீடு மற்றும் மருத்துவ செலவுகளை ஏற்க காப்பீடு நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த, சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் பி.ஜிஜா, உறுப்பினர்கள் டி.ஆர்.சிவகுமார், எஸ்.நந்தகோபாலன் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:
அசல் பில்கள் இணைக்கப்படவில்லை. இதனால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது என தெரிவித்துள்ளது. ஆனால், நிறுவன விதிகளில் அசல் பில்களை சமர்ப்பிக்க வேண்டும் என குறிப்பிடவில்லை.
அவ்வாறு இருக்கும்போது, மருத்துவ காப்பீடு பெற, அசல் பில்களை கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும் என கேட்கக்கூடாது. விண்ணப்பத்தை சரிவர ஆராயாமல் நிராகரித்தது சேவை குறைபாடு. எனவே, 1.20 லட்சம் ரூபாய்க்கான மருத்துவ செலவை, 9 சதவீத வட்டியுடன் 2022 முதல் கணக்கிட்டு காப்பீடு நிறுவனம் வழங்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு 10,000 ரூபாய் இழப்பீடாகவும், 5,000 ரூபாய் வழக்கு செலவாகவும் இரண்டு மாதத்தில் வழங்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டுள்ளனர்.