/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வட சென்னை மின் நிலையம் 45 நாட்கள் உற்பத்தி நிறுத்தம்
/
வட சென்னை மின் நிலையம் 45 நாட்கள் உற்பத்தி நிறுத்தம்
வட சென்னை மின் நிலையம் 45 நாட்கள் உற்பத்தி நிறுத்தம்
வட சென்னை மின் நிலையம் 45 நாட்கள் உற்பத்தி நிறுத்தம்
ADDED : அக் 18, 2024 12:12 AM
சென்னை,
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில், மின் வாரியத்திற்கு, வட சென்னை விரிவாக்க அனல் மின் நிலையம் உள்ளது. அங்கு தலா, 600 மெகா வாட் திறனில் இரு அலகுகளில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த மின்சாரம், சென்னை மற்றும் அதை சுற்றிய மாவட்டங்களின் மின் தேவையை பூர்த்தி செய்ய பயன்படுகிறது.
விரிவாக்க மின் நிலையத்தின் இரண்டாவது அலகில் ஆண்டு பராமரிப்பு பணிக்காக, நேற்று முன்தினம் அதிகாலை முதல், 45 நாட்களுக்கு மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது.
வட சென்னை மின் நிலையத்தில், 210 மெகா வாட் திறன் உடைய இரண்டாவது அலகிலும்; சேலம், மேட்டூர் அனல் மின் நிலையத்தில், 600 மெகா வாட்; துாத்துக்குடி மின் நிலையத்தில், 210 மெகா வாட் திறன் உடைய இரு அலகுகளிலும், 'பாய்லர் டியூப் பஞ்சர்' காரணமாக இரு நாட்களுக்கு முன் முதல், மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.