sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சென்னையில் மாயமான லாரி உளுந்துார்பேட்டையில் மீட்பு வடமாநில வாலிபர் கைது

/

சென்னையில் மாயமான லாரி உளுந்துார்பேட்டையில் மீட்பு வடமாநில வாலிபர் கைது

சென்னையில் மாயமான லாரி உளுந்துார்பேட்டையில் மீட்பு வடமாநில வாலிபர் கைது

சென்னையில் மாயமான லாரி உளுந்துார்பேட்டையில் மீட்பு வடமாநில வாலிபர் கைது


ADDED : அக் 13, 2024 02:26 AM

Google News

ADDED : அக் 13, 2024 02:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை:சென்னை, கொளத்துார் பகுதியைச் சேர்ந்தவர் தனுஷ்குமார். இவர், அப்பகுதியில் இரும்பு மற்றும் சிமென்ட் விற்பனை கடை வைத்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு, 10:00 மணியளவில், ஆயுத பூஜைக்காக லாரியை சுத்தம் செய்துவிட்டு, வீட்டிற்கு சென்றார். நேற்று காலை கடைக்கு சென்று பார்த்த போது, லாரியை காணவில்லை. புழல் போலீசில் தனுஷ்குமார் புகார் அளித்தார்.

இந்நிலையில், சுங்கச்சாவடி 'பாஸ்டேக்' வாயிலாக, விக்கிரவாண்டி சுங்கச்சாவடியை லாரி கடந்து சென்றது தெரியவே, உளுந்துார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நேற்று காலை, 11:00 மணியளவில் சுங்கச்சாவடி அருகே லாரியையும், கடத்திய நபரையும் போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

விசாரணையில், லாரியை கடத்தியவர் உத்தரப் பிரதேச மாநிலம், பைசாபாத் மாவட்டம், சாய்கஞ்சோரா பகுதியைச் சேர்ந்த ஜூனுத்பிரகாஷ் என்பவரது மகன் சத்தியபிரகாஷ், 20, என தெரிந்தது.

இவர் ஓராண்டாக தனுஷ்குமாரிடம் பணிபுரிந்த நிலையில், நேற்று லாரியை கடத்திச் சென்றுள்ளார். சத்தியபிரகாஷை கைது செய்த போலீசார், புழல் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us