sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

உணவகத்தை சூறையாடிய 'ஓசி' பிரியாணி ரவுடிகள் கைது

/

உணவகத்தை சூறையாடிய 'ஓசி' பிரியாணி ரவுடிகள் கைது

உணவகத்தை சூறையாடிய 'ஓசி' பிரியாணி ரவுடிகள் கைது

உணவகத்தை சூறையாடிய 'ஓசி' பிரியாணி ரவுடிகள் கைது


ADDED : பிப் 17, 2024 12:21 AM

Google News

ADDED : பிப் 17, 2024 12:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனாம்பேட்டை,சென்னை, தேனாம்பேட்டை, நல்லான் தெருவைச் சேர்ந்தவர் சதீஷ்குமார், 40. இவர், ஆழ்வார்பேட்டை, டி.டி.கே. சாலையில் துரித உணவகம் நடத்தி வருகிறார்.

கடந்த 14ம் தேதி, ஆட்டோவில் வந்த இரு மர்ம நபர்கள், இவரது உணவகத்தில் பிரியாணி சாப்பிட்டு விட்டு, பணம் கொடுக்காமல் மிரட்டிவிட்டுச் சென்றனர்.

இதுகுறித்து, சதீஷ்குமார் தேனாம்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.

இதை அறிந்த அந்த நபர்கள், ஆத்திரத்தில் மீண்டும் வந்து கடையை சூறையாடி விட்டு, கல்லாப்பெட்டியில் இருந்த 27,000 ரூபாயை கொள்ளையடித்துக் கொண்டு தப்பினர்.

இதுகுறித்து மீண்டும், சதீஷ்குமார் புகார் அளித்த புகாரை விசாரித்த போலீசார், சம்பவத்தில் ஈடுபட்ட வேளச்சேரி, ஜெகநாதபுரத்தைச் சேர்ந்த பாட்டில்மணி, 40, பெசன்ட் நகரைச் சேர்ந்த ரபீக், 34, ஆகியோரை, நேற்று கைது செய்தனர். இதில், பாட்டில்மணி மீது கொலை வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us