/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குப்பை அகற்றுவதில் அதிகாரிகள் மெத்தனம்
/
குப்பை அகற்றுவதில் அதிகாரிகள் மெத்தனம்
ADDED : ஜன 02, 2024 12:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தரமணி, களிக்குன்றம் பிரதான சாலை, 170 மற்றும் 178 ஆகிய வார்டுகளில் வருகிறது. இந்த சாலையில், எம்.ஜி.ஆர்., திரைப்பட கல்லுாரி, அரசு பாலிடெக்னிக் மற்றும் அரசு, தனியார் நிறுவனங்கள் உள்ளன.
'மிக்ஜாம்' புயலின்போது, வெள்ளத்துடன் குப்பை மற்றும் முறிந்து விழுந்த மரக்கிளைகள் சேர்ந்தன. இந்த கழிவு, சாலை முழுதும் குப்பையாக கிடக்கிறது.
இதை அகற்றுவது யார் என, இரண்டு வார்டு அதிகாரிகள் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. இவர்களின் மெத்தனத்தால், அப்பகுதி சுகாதார சீர்கேடாக உள்ளது. உயர் அதிகாரிகள் தலையிட்டு, குப்பை, மரக்கழிவுகளை அகற்ற வேண்டும்.
- மு.தனசேகர், 40,
களிக்குன்றம்,
தரமணி.

