sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

அனுமதியின்றி பேனர் தடுத்து நிறுத்திய அதிகாரிகள்

/

அனுமதியின்றி பேனர் தடுத்து நிறுத்திய அதிகாரிகள்

அனுமதியின்றி பேனர் தடுத்து நிறுத்திய அதிகாரிகள்

அனுமதியின்றி பேனர் தடுத்து நிறுத்திய அதிகாரிகள்


ADDED : மே 15, 2025 12:14 AM

Google News

ADDED : மே 15, 2025 12:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, சென்னை மாநகராட்சிக்கு வருமானம் ஈட்டும் விதமாக, விபத்து ஏதும் நிகழாமல் இருக்கும் இடமாக ஒதுக்கப்பட்டு தனியார் நிறுவனங்கள் விளம்பரப்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டு வருகின்றன.

ஆனால், அனுமதி வழங்கப்படாத இடங்களிலும், பகுதிவாசிகள், வாகன ஓட்டிகளின் உயிரை காவு வாங்கும் வகையில் அந்தந்த பகுதி அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகளை 'கவனித்து' கொண்டு, பிரதான சாலையோரங்களில் பேனர்கள் வைக்கின்றனர்.

இது குறித்து, நம் நாளிதழில் அடிக்கடி செய்தி வெளியாகிறது. அந்நேரம் மட்டும், அதிகாரிகள் கண்துடைப்பிற்காக பேனரை அகற்றி வருகின்றனர். மீண்டும் அதே இடத்தில் பேனர்கள் வைக்கப்படுகின்றன.

இந்நிலையில், தேனாம்பேட்டை அண்ணாசாலை சிக்னல் அருகே உள்ள ஆனந்தா ஹோட்டல் மீது அனுமதியின்றி விளம்பர பேனர் அமைப்பதற்கான கட்டமைப்புகள் அமைக்கப்பட்டன.

இதையறிந்த மாநகராட்சி அதிகாரிகள், சம்பந்தப்பட்ட நபருக்கு நேற்று 'நோட்டீஸ்' வழங்கி உள்ளனர். ஓரிரு நாட்களில் பேனர் அமைப்பதற்கான கட்டமைப்பை, முழுதுமாக அகற்ற உத்தரவிட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us