ADDED : ஆக 14, 2025 11:48 PM
அ நிறம் | அளவு
நெற்குன்றம், தனலட்சுமி நகரைச் சேர்ந்தவர் விசு என்ற விஸ்வநாதன், 27; பழைய குற்றவாளி. இவர், வில்லிவாக்கத்தில், 2018ல் ஒரு கொலை முயற்சி வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். நீதிமன்ற ஜாமினில் வெளிவந்தவர் தலைமறைவானார்.
அவரை கைது செய்ய, 18வது கூடுதல் அமர்வு நீதிமன்றம், ஜூன் 23ல் பிடியாணை பிறப்பித்தது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த விஸ்வநாதனை வில்லிவாக்கம் போலீசார் நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
