sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மாடு முட்டி துாக்கி வீசியதில் முதியவர் இடுப்பு எலும்பு முறிவு

/

மாடு முட்டி துாக்கி வீசியதில் முதியவர் இடுப்பு எலும்பு முறிவு

மாடு முட்டி துாக்கி வீசியதில் முதியவர் இடுப்பு எலும்பு முறிவு

மாடு முட்டி துாக்கி வீசியதில் முதியவர் இடுப்பு எலும்பு முறிவு


ADDED : ஜன 30, 2024 12:32 AM

Google News

ADDED : ஜன 30, 2024 12:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஐஸ் ஹவுஸ், திருவல்லிக்கேணியில் மீண்டும் ஒரு சம்பவமாய், மாடு முட்டியதில் முதியவரின் இடுப்பு எலும்பு உடைந்தது.

சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் அருகே, கடந்த சில மாதங்களுக்கு முன், மாடு ஒன்று முட்டியதில், முதியவர் ஒருவர் சிகிச்சையில் இருந்து, பின் இறந்தார். அதைத் தொடர்ந்து, ஐஸ் ஹவுஸ் பகுதியில் சாலையில் திரிந்த மாடு ஒன்று, ஆறு பேரை முட்டித் தள்ளியது.

இந்த சம்பவத்திற்குப் பின், மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து, சாலையில் திரிந்த மாடுகளை பிடித்துச் சென்று, உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர். தொடர்ந்து நடவடிக்கையும் எடுத்து வந்தனர்.

இந்நிலையில், திருவல்லிக்கேணி பகுதியில் மீண்டும் ஒரு சம்பவமாக நேற்று மதியம், மாடு ஒன்று முட்டி துாக்கி வீசியதில், முதியவரின் இடுப்பு எலும்பு உடைந்தது.

பலத்த காயமடைந்த இந்த முதியவர், திருவல்லிக்கேணி பந்தள வேணுகோபால் தெருவைச் சேர்ந்த கன்னியப்பன், 77, எனத் தெரிந்தது. தற்போது அவருக்கு, தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, ஐஸ் ஹவுஸ் போலீசார் விசாரிக்கின்றனர்.

சம்பவம் நடக்கும் போது மட்டும் நடவடிக்கை எடுக்காமல், மாநகராட்சி அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து, சாலையில் திரியும் மாடுகளை பிடித்து, உரிமையாளருக்கு அபராதம் விதிக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us