/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாடு முட்டிய முதியவர் சிகிச்சை பலனின்றி பலி
/
மாடு முட்டிய முதியவர் சிகிச்சை பலனின்றி பலி
ADDED : நவ 07, 2024 12:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி,
ஆவடி அடுத்த வெள்ளானுாரைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி, 67; ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இதையடுத்து, தனியார் கல்லுாரியில் உதவி பாதுகாப்பு அலுவலராக பணியாற்றி வந்தார்.
கடந்த 3ம் தேதி மாலை 6:30 மணிக்கு பஜாஜ் சி.டி. 100 பைக்கில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, கோவில் பதாகை, ஈஸ்வரி இரும்பு கடை அருகே, சாலையின் குறுக்கே வந்த பசுமாடு, பைக்கில் மோதியது. இதில் நிலை தடுமாறி விழுந்த ராமமூர்த்தி பலத்த காயமடைந்தார்.
அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, ஆவடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின், மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், நேற்று உயிரிழந்தார்.