/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காரில் மோதிய டிராக்டர் ஒருவர் பலி; 4 பேர் சீரியஸ்
/
காரில் மோதிய டிராக்டர் ஒருவர் பலி; 4 பேர் சீரியஸ்
ADDED : ஜன 07, 2025 12:29 AM

திருத்தணி, ஸ்ரீபெரும்புதுார் ராஜிவ்காந்தி நகரைச் சேர்ந்தவர் சுதாகர், 44; தனியார் நிறுவன ஊழியர். இவர், நேற்று மதியம், 'வோக்ஸ்வாகன் - போலோ' காரில், மனைவி கோதைநாயகி, மகள் தக் ஷனா, 18, மகன் சுதர்சன், 13, ஆகியோருடன் திருப்பதி கோவிலுக்கு செல்வதற்கு, திருவள்ளூர் வழியாக திருத்தணி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
காரை சுதாகர் ஓட்டி வந்தார். மாலை 3:30 மணிக்கு, திருத்தணி அரசு கலைக் கல்லுாரி அருகே வந்தபோது, எதிரே திருத்தணியில் இருந்து, திருவாலங்காடு கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றி வந்த டிராக்டர், கார் மீது மோதியது.
இதில், சுதாகர், கோதைநாயகி, தக்க்ஷனா, சுதர்சன் மற்றும் டிராக்டர் ஓட்டுனரும் காயம் அடைந்தனர். திருத்தணி அரசு மருத்துவமனையில் சுதாகர் உயிரிழந்தார்.
மற்ற நான்கு பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.