/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அடுத்தடுத்து மோதிய 3 லாரிகள் விபத்தில் ஓட்டுனர் ஒருவர் பலி
/
அடுத்தடுத்து மோதிய 3 லாரிகள் விபத்தில் ஓட்டுனர் ஒருவர் பலி
அடுத்தடுத்து மோதிய 3 லாரிகள் விபத்தில் ஓட்டுனர் ஒருவர் பலி
அடுத்தடுத்து மோதிய 3 லாரிகள் விபத்தில் ஓட்டுனர் ஒருவர் பலி
ADDED : நவ 10, 2024 12:42 AM

கும்மிடிப்பூண்டி, ஆந்திர மாநிலம் தடாவில் உள்ள ஸ்ரீசிட்டி நோக்கி, நேற்று அதிகாலை, ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் ஏற்றிய கன்டெய்னர் லாரி சென்றது. நசரத்பேட்டையை சேர்ந்த நாகராஜ், 61, ஓட்டி சென்றார்.
சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகம் எதிரே உள்ள மேம்பாலத்தில் லாரி சென்றபோது, ஆந்திரா நோக்கி சென்ற மற்றொரு கன்டெய்னர் லாரி, திடீரென பிரேக் போட்டதால், பின்னால் வந்த சரக்கு லாரி மோதியது. அதன் மீது, அதற்கு பின்னால் நாகராஜ் ஓட்டி வந்த லாரி மோதியது.
விபத்தில், சம்பவ இடத்திலேயே நாகராஜ் உயிரிழந்தார். சரக்கு லாரி ஓட்டுனரான, ஆந்திரவைச் சேர்ந்த லட்சுமணன், 46, படுகாயமடைந்தார். கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர். இதனால் ஒரு மணி நேரம், போக்குவரத்து பாதித்தது.