sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பதிவு இல்லாத வாகனங்கள் ஒரு மாதமாக நிறுத்திவைப்பு

/

பதிவு இல்லாத வாகனங்கள் ஒரு மாதமாக நிறுத்திவைப்பு

பதிவு இல்லாத வாகனங்கள் ஒரு மாதமாக நிறுத்திவைப்பு

பதிவு இல்லாத வாகனங்கள் ஒரு மாதமாக நிறுத்திவைப்பு


ADDED : ஜன 12, 2024 01:02 AM

Google News

ADDED : ஜன 12, 2024 01:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, தமிழக குடிநீர் வடிகால் வாரியம் வாயிலாக, பல்வேறு மாவட்டங்களில் கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இப்பணிகளை ஆய்வு செய்யும் அதிகாரிகள் பயன்பாட்டிற்காக, கடந்த மாதம் மகேந்திரா நிறுவனத்தின் புதிய பொலிரோ வாகனங்கள் வழங்கப்பட்டன. இதற்காக, ஒவ்வொரு வாகனத்திற்கும், 11 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அரசு வழங்கிய புதிய வாகனங்கள், வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இன்னும் பதிவு செய்யப்படவில்லை. பதிவெண் இல்லாததால், வாகனங்களை இயக்க முடியவில்லை.

சேப்பாக்கம் காமராஜர் சாலையில் உள்ள, குடிநீர் வடிகால் வாரிய தலைமை அலுவலகத்தில், நான்கு வாகனங்கள் நாள் கணக்கில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. புதிய வாகனங்கள் இருந்தும், மழை பாதித்த மாவட்டங்களில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக, ஓட்டை, உடைசல் வாகனங்களில் அதிகாரிகள் சென்று வருகின்றனர்.

இதுகுறித்து கேட்டபோது, 'புதிய ஆண்டில் பதிவு செய்வதற்காக தாமதமானது. இன்று வாகனங்கள் பதிவு செய்யப்படவுள்ளன' என, குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us