ADDED : மே 23, 2025 12:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி ஆவடி அடுத்த அண்ணனுார் ரயில் நிலையத்தில், 'லெவல் கிராசிங்' அருகே, 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரின் சடலம் கிடப்பதாக, ஆவடி ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி ரயில்வே போலீசார், உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், லெவல் கிராசிங் அருகே தண்டவாளத்தை கடந்த போது, சென்னை நோக்கி சென்ற விரைவு ரயிலில் அடிபட்டு, அவர் இறந்தது தெரிந்தது. இறந்தது யார் என்பது குறித்து, போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.