sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பொது/ வாரிய குடியிருப்பு பால்கனி இடிந்து ஒருவர் படுகாயம்

/

பொது/ வாரிய குடியிருப்பு பால்கனி இடிந்து ஒருவர் படுகாயம்

பொது/ வாரிய குடியிருப்பு பால்கனி இடிந்து ஒருவர் படுகாயம்

பொது/ வாரிய குடியிருப்பு பால்கனி இடிந்து ஒருவர் படுகாயம்


ADDED : டிச 24, 2024 01:23 AM

Google News

ADDED : டிச 24, 2024 01:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை,

பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் உள்ள, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பின் பால்கனி இடிந்து விழுந்து, எலக்ட்ரீசியன் படுகாயமடைந்தார்.

சென்னை பட்டினப்பாக்கம், சீனிவாசபுரத்தில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில், 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கட்டடம், 60 ஆண்டுகள் பழமையானது என்பதால் சிதிலமடைந்து இடிந்து விழுகிறது. சமீபத்தில், இக்குடியிருப்பின் பால்கனி இடிந்து விழுந்து, அதே குடியிருப்பில் வசித்து வந்த சையது குலாம், 23 என்ற எலக்ட்ரீசியன் பலியனார்.

இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு, 9:50 மணியளவில், குடியிருப்பின், 29 வது பிளாக்கில் வசித்து வரும், எலக்ட்ரீசியன் மோகன்,48, இரண்டாவது மாடியில் உள்ள, பால்கனியில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது, மூன்றாவது மாடியின் பால்கனி இடிந்து அவர் மீது விழுந்துள்ளது. இதனால் படுகாயமடைந்து, ராயப்பேட்டை அரசு மருத்துவனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக, பட்டினப்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

-






      Dinamalar
      Follow us