/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விளையாட்டு அரங்கம், பள்ளி கட்டடங்கள் திறப்பு
/
விளையாட்டு அரங்கம், பள்ளி கட்டடங்கள் திறப்பு
ADDED : மே 29, 2025 11:52 PM
சென்னை :சென்னையில் விளையாட்டு அரங்கம், பள்ளிக்கட்டடங்கள் உள்ளிட்டவற்றை, முதல்வர் ஸ்டாலின், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக திறந்து வைத்தார். தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்வில், பல்வேறு பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்.
அதன் விபரம்:
* மாத்துார் எம்.எம்.டி., 59வது தெருவில், தொடக்க பள்ளிக்கு புதிய கட்டடம்; மாதவரம் பாரதியார் தெரு மேல்நிலை பள்ளியில், நான்கு வகுப்பறைகள், இரு கழிப்பறைகள் கட்டும் பணி உள்ளிட்ட பள்ளி கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன
* அடையாறு திருவள்ளுவர் நகர், 7வது குறுக்கு தெருவில், 1.47 கோடி ரூபாய் செலவில் கபடி மைதானம், இறகுப்பந்து மைதானத்துடன் கூடிய உள்விளையாட்டு அரங்கம், பெண்கள் உடற்பயிற்சி கூடம், கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது
* மாதவரம் பரப்பன்குளத்தில், 1.40 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பூங்கா என, 30.60 கோடி ரூபாய் மதிப்பில் முடிவுற்ற, 11 திட்டப் பணிகள் துவங்கப்பட்டுள்ளன
* பள்ளிக்கரனை, முகலிவாக்கம், மடிப்பாக்கம் ஆகிய விரிவான பாதாள சாக்கடை திட்டங்கள், 188.55 கோடி ரூபாய் மதிப்பிலான முடிந்துள்ளன
முடிவுற்ற இந்த பணிகளை, முதல்வர் ஸ்டாலின் நேற்று, தலைமை செயலகத்தில் இருந்தவாறு, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக துவக்கி வைத்தார்.
* சென்னை மாநகராட்சிக்கு இயற்கை எரிவாயு வாயிலாக இயங்கும், ஆறு நீர் தெளிக்கும் வாகனங்கள், மரக்கிளைகள் அகற்றும், ஆறு ஹைட்ராலிக் இயந்திரங்கள் என, 19.44 கோடி ரூபாய் மதிப்பிலான, 50 புதிய வாகனங்களின் செயல்பாட்டையும் முதல்வர் துவக்கி வைத்தார்.
* பெருங்குடி மண்டலம், கொட்டிவாக்கம், பகிங்ஹாம் கால்வாய் குறுக்கே, கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாலிபுரம் சாலையை இணைக்கும் வகையில், வெங்கடேசபுரம் - இளங்கோ நகரில் புதிய பாலம்; காமராஜர் சாலை, வீரமணி சாலை, பாலவாக்கம் பகுதியில் புதிய பாலம் அமைக்கப்பட உள்ளது
* சோழிங்கநல்லுார் மண்டலத்தில், பகிங்ஹாம் கால்வாய் குறுக்கே, பாண்டியன் தெரு, அண்ணா நகர், துரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பாலம் அமைக்கப்பட உள்ளது. இவை உட்பட, 59.60 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பணிகளுக்கு, முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
***