ADDED : நவ 04, 2025 12:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:  மாதவரம் மண்டலம் 28வது வார்டில் 1.49 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்ட விளையாட்டு திடல், நேற்று திறக்கப்பட்டது.
இதில், மாதவரம் தொகுதி எம்.எல்.ஏ., சுதர்சனம் மண்டல குழு தலைவர் நந்தகோபால் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தொடர்ந்து மாதவரம் மண்டலம் 31வது வார்டு புழல் பகுதி அருகே உள்ள ரெட்டை ஏரியில் இருந்து திறந்துவிடப்படும் உபரி ஏரி நீரால் பாதிக்கப்படும் பகுதிகளை, மேயர் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டனர்.
மேலும், வடபெரும்பாக்கத்தில் உள்ள புழல் ஏரி உபரி நீர் கால்வாய் மற்றும் மாதவரம் பால்பண்ணை, மணலி ஏரி சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்தார்.

