sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஊர்க்காவல் படையில் சேவையாற்ற வாய்ப்பு

/

ஊர்க்காவல் படையில் சேவையாற்ற வாய்ப்பு

ஊர்க்காவல் படையில் சேவையாற்ற வாய்ப்பு

ஊர்க்காவல் படையில் சேவையாற்ற வாய்ப்பு


ADDED : ஜன 20, 2024 12:51 AM

Google News

ADDED : ஜன 20, 2024 12:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, சென்னை ஊர்க்காவல் படையில் சேர, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சென்னை ஊர்க்காவல் படையில் சேர விரும்புவோர், 18 - 50 வயதிற்குள் இருக்க வேண்டும். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது தவறியவர்களாக இருக்கலாம்.

குற்றப்பின்னணி இல்லாத, நன்னடத்தை உள்ளவர்களாகவும், சென்னையில் வசிப்பவர்களாகவும், குடும்ப அட்டை வைத்திருப்போராகவும் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் ஊர்க்காவல் படையினருக்கு, 45 நாட்கள், தினமும், ஒரு மணி நேரம் பயிற்சி அளிக்கப்படும். பின் அவரவர் வசிக்கும் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களுக்கு பணிபுரிய அனுப்பப்படுவர்.

சீருடை, தொப்பி, ஷூ வழங்கப்படும். பகல், இரவு ரோந்து பணி, போக்குவரத்து சீர்செய்ய, 560 ரூபாய் வழங்கப்படும். தகுதி உடையவர்கள், சைதாப்பேட்டை காவல் நிலைய வளாகத்தில் உள்ள ஊர்க்காவல் படை தலைமை அலுவலகத்தில் விண்ணப்பங்கள் பெற்று, அதே அலுவலகத்திற்கு அனுப்பலாம்.

விபரங்களுக்கு, 94981 35190, 95667 76222 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us