/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருமண மண்டபத்திற்கு ஒதுக்கிய இடம் வர்த்தக நோக்கில் பயன்படுத்த எதிர்ப்பு
/
திருமண மண்டபத்திற்கு ஒதுக்கிய இடம் வர்த்தக நோக்கில் பயன்படுத்த எதிர்ப்பு
திருமண மண்டபத்திற்கு ஒதுக்கிய இடம் வர்த்தக நோக்கில் பயன்படுத்த எதிர்ப்பு
திருமண மண்டபத்திற்கு ஒதுக்கிய இடம் வர்த்தக நோக்கில் பயன்படுத்த எதிர்ப்பு
ADDED : ஏப் 25, 2025 12:19 AM

கொளத்துார், கொளத்துாரில் திருமணம் கட்ட ஒதுக்கப்பட்ட, 6,000 சதுர அடி இடத்தை, வர்த்த நோக்கில் பயன்படுத்த முயற்சி நடப்பதாக, அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கடந்த 2017 ல் முதல்வராக இருந்த ஜெயலலிதா, 'கொளத்துார் பெரியார் நகரில், வீட்டு வசதி வாரியம் மற்றும் வீட்டு வசதி கூட்டுறவு சங்கங்கள் சார்பில், 4.51 கோடி ரூபாயில், அம்மா கல்யாண மண்டபம் கட்டப்படும்' என, 110 விதியின் கீழ் சட்டசபையில் அறிவித்தார்.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து, அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. பின், 2022ம் ஆண்டு, பெரியார் நகர் அரசு அலுவலர்கள் கூட்டுறவு வீட்டுமனை வினியோக சங்கம், திருமண மண்டபம் கட்டுமான வரைபடத்திற்காக, சி.எம்.டி.ஏ.,விடம் விண்ணப்பித்து அதற்கான கட்டணத்தையும் செலுத்தியது.
இந்நிலையில், திருமண மண்டபத்திற்கு ஒதுக்கப்பட்ட இடத்திற்கு, அம்மா உணவகம் மாற்றப்பட்டுள்ளது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:
கொளத்துார் பெரியார் நகரில், அரசு அலுவலர்கள் கூட்டுறவு வீட்டுமனை வினியோக சங்கத்தினருக்காக மனைகள் ஒதுக்கப்பட்டன. இங்கு, 1,000க்கும் மேற்பட்டோர் மனைகளை வாங்கினோம். மருத்துவமனை, பூங்கா, திருமண மண்டபம், விளையாட்டு மைதானம் என, அனைத்துக்கும் இடம் ஒதுக்கப்பட்டது.
திருமண மண்டபத்திற்கு ஒதுக்கப்பட்ட, 6,000 சதுர அடி இடம் உள்ளது. பெரியார் நகர் அரசு மருத்துவமனை வளாகத்தில் இயங்கி வந்த அம்மா உணவகத்தை, இந்த இடத்தில் சிமென்ட் கொட்டகை அமைத்து மாற்றி உள்ளனர்.
அங்கு திருமண மண்டபத்தை தவிர்த்து, வணிக வளாகம் உள்ளிட்ட மற்ற தேவைகளுக்கு பயன்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில் அறிவித்தபடி, திருமண மண்டபத்தை இங்கு கட்டினால், எங்களுக்கு பேருதவியாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

