sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 சென்னை பல்கலை மாணவர் விடுதியை பயன்பாட்டிற்கு கொண்டுவர உத்தரவு

/

 சென்னை பல்கலை மாணவர் விடுதியை பயன்பாட்டிற்கு கொண்டுவர உத்தரவு

 சென்னை பல்கலை மாணவர் விடுதியை பயன்பாட்டிற்கு கொண்டுவர உத்தரவு

 சென்னை பல்கலை மாணவர் விடுதியை பயன்பாட்டிற்கு கொண்டுவர உத்தரவு


ADDED : டிச 10, 2025 05:13 AM

Google News

ADDED : டிச 10, 2025 05:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: நம் நாளிதழில் செய்தி வெளியானதை அடுத்து, முதல்வர் திறந்து வைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படாத சென்னை பல்கலை முதுகலை மாணவர் விடுதியை, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் நேற்று பார்வை யிட்டார்.

விடுதியை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவரும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

சென்னை பல்கலை, முதுகலை மாணவர்களின் வசதிக்காக, சென்னை காமராஜர் சாலையில் கட்டப்பட்ட பிரத்யேக மாணவர் விடுதியை, கடந்த மே 20ல், முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

ஆனால், மாணவர் விடுதி திறக்கப்பட்டு ஏழு மாதங்களாகியும், இன்னும் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. விடுதிக்கு தேவையான, தளவாட பொருட்கள் கொள்முதலுக்கான நிதி ஒதுக்க தாமதம் ஏற்பட்டுள்ளதே காரணம் என கூறப்படுகிறது.

இதுதொடர்பாக, நம் நாளிதழில், நேற்று முன்தினம் செய்தி வெளியானது. இதையடுத்து, மாணவர் விடுதியை, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் நேற்று பார்வையிட்டார்.

விடுதி பயன்பாட்டிற்கு கொண்டுவராததற்கான காரணம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளாத அதிகாரிகளை அவர் கண்டித்தார். விரை வில், மாணவர் விடுதியை பயன்பாட்டிற்கு கொண்டு வந்து, மாணவர்களுக்கு அறைகள் ஒதுக்கும்படியும், அ வர் உத்தரவிட்டார்.

ஆய்வின்போது, உயர்கல்வித்துறை செயலர் சங்கர், சென்னை பல்கலை பதிவாளர் ரீட்டா ஜான் ஆகியோர் இருந்தனர்.






      Dinamalar
      Follow us