ADDED : மே 06, 2025 11:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரம்பூர், பெரம்பூர், நெல்வயல்சாலை முத்து மாரியம்மன் கோவிலை சேர்ந்தவர் ராஜ்குமார், 39. பெரம்பூர் சர்ச் அருகே கூல்பார் நடத்தி வருகிறார்.
கடந்த 4ம் தேதி இரவு, மர்ம நபர் ஒருவர்ராஜ்குமாரிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளார்.
பணம் தர மறுத்ததால், கல்வீசி கடை கண்ணாடிகளை நொறுக்கினார்; ராஜ்குமாரையும் தாக்கிவிட்டு தப்பினார்.
செம்பியம் போலீசார் வழக்குப்பதிந்து, மாமூல் கேட்டு மிரட்டிய வியாசர்பாடியை சேர்ந்த யோவான்,24 என்பவரை கைது செய்தனர். யோவான் மீது ஏற்கனவே இரண்டு வழக்குகள் உள்ளன.

