sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ராஜரத்தினம் மைதானத்தில் வெளியாட்கள் நுழைய தடை

/

ராஜரத்தினம் மைதானத்தில் வெளியாட்கள் நுழைய தடை

ராஜரத்தினம் மைதானத்தில் வெளியாட்கள் நுழைய தடை

ராஜரத்தினம் மைதானத்தில் வெளியாட்கள் நுழைய தடை


ADDED : ஜூன் 23, 2025 01:43 AM

Google News

ADDED : ஜூன் 23, 2025 01:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்திற்குள்,போலீஸ் அதிகாரிகள், காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்தோரை தவிர மற்றவர்கள் நுழைவதற்கு அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு:

ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில், போலீசார் பயிற்சி மேற்கொள்ள உள்ளனர். அதனால் வெளியாட்கள், உணவு பொருட்களை மைதானத்திற்குள் கொண்டுவர அனுமதி கிடையாது.

ஆண்கள் லுங்கியும், பெண்கள் இரவு நேர உடையும் அணிந்து வர அனுமதி கிடையாது. மிதிவண்டிகளை மைதானத்திற்குள் கொண்டு வரக்கூடாது. வெளியாட்கள் உடற்பயிற்சிக்கும், நடைபயிற்சிக்கும் மட்டுமே மைதானத்தை பயன்படுத்த வேண்டும்.

விளையாட்டு நேரம் மாலை 5:00 முதல் 6:30 மணி வரையும், நடைபயிற்சி நேரம், காலை 5:00 மணி முதல் 8:00 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர். மற்ற நேரங்களில் வந்தால் அனுமதி மறுக்கப்படும்

மைதானத்தில் ஏதாவது விழா நடந்தால், அந்நேரத்தில் காலை 6:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை, மைதானத்திற்குள் நுழைய அனுமதி கிடையாது.

இவ்வாறு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us