ADDED : நவ 12, 2025 12:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆதம்பாக்கம்: ஆதம்பாக்கம், காந்தி நகர், ஏரிக்கரை பகுதியை சேர்ந்தவர் மனோகர், 59; பெயின்டர். இவர், கடந்த 10ம் தேதி காலை, வேலை நிமித்தமாக, சைக்கிளில் மடிப்பாக்கத்திற்கு சென்றார்.
ஆதம்பாக்கம், மோகனபுரி, 2வது தெருவில் சென்ற போது, எதிர்திசையில் வந்த அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் மோதி பலத்த காயமடைந்தார்.
இதையடுத்து, கிண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், மேல் சிகிச்சைக்காக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு, தீவிர சிகிச்சை பலனின்றி, நேற்று காலை மனோகர் உயிரிழந்தார். இது குறித்த புகாரின்படி, பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, விபத்தை ஏற்படுத்திய நபரை தேடி வருகின்றனர்.

