sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மாங்காய் பறிக்க மரத்தில் ஏறிய பெயின்டர் தவறி விழுந்து பலி

/

மாங்காய் பறிக்க மரத்தில் ஏறிய பெயின்டர் தவறி விழுந்து பலி

மாங்காய் பறிக்க மரத்தில் ஏறிய பெயின்டர் தவறி விழுந்து பலி

மாங்காய் பறிக்க மரத்தில் ஏறிய பெயின்டர் தவறி விழுந்து பலி


ADDED : ஜூலை 02, 2025 12:38 AM

Google News

ADDED : ஜூலை 02, 2025 12:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்றத்துார்,மாங்காடு அருகே, மா மரத்தில் ஏறி மாங்காய் பறிக்க முயன்றபோது தவறி விழுந்து, பெயின்டர் உயிரிழந்தார்.

பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை, பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் நீலகண்டன், 54; பெயின்டர். இவர், மாங்காடு அருகே மலையம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு, நேற்று பெயின்ட் அடிக்க சென்றார்.

அப்போது, வீட்டின் அருகே இருந்த மா மரத்தில் மாங்காய் கொத்து கொத்தாக காய்த்திருந்த நிலையில், அதை பறிக்க மரத்தில் ஏறியபோது தவறி விழுந்துள்ளார்.

இதில், பலத்த காயமடைந்த நீலகண்டனை அங்கிருந்தவர்கள் மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவ பரிசோதனையில் நீலகண்டன் உயிரிழந்தது தெரிய வந்தது. தகவல் அறிந்த மாங்காடு போலீசார், நீலகண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us